Thursday, October 06, 2022

எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன்

 

India Today பத்திரிக்கை வருடா வருடம் இந்திய மாநிலங்களை தரப்படுத்தி வெளியிடும். அதை நூலகத்திலோ, இணையத்திலோ தேடி படித்து பாருங்கள். அதில் ஒவ்வொரு முறை திமுக ஆட்சில இருக்கும் பொழுதும் தமிழ் நாடு முதல் மூன்று இடங்களில் இருக்கும். ஆனால் அதிமுக வரும் பொழுது எல்லாம் கீழே இறங்கி விடும். அதிலும் OPS முதல்வராக இருந்த பொழுது கடைசி இடதுக்கு தள்ளப்பட்ட கேவலமும் நடந்தது.

குறிப்பாக 96-01 திமுக ஆட்சி இன்றைய நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பொற்கால ஆட்சி என்று திமுக பிடிக்காத பார்ப்பன பத்திரிகைகளே ஒத்து கொண்ட விடயம். I.T துறை முதல், சாலை மற்றும் போக்கு வரத்து விரிவாகம் வரை தமிழ் நாடு நாட்டிலேயே உச்சதுக்கு போக காரணம் திமுக தான். EPS வந்து எல்லா இடத்துக்கு MGR பேரை வச்சிட்டு வெற்று தம்பட்டம் அடித்து கொண்ட கொள்ளைகாரன்/ கொலைகாரன்.

(MGR ஆண்ட 10 வருடங்கள் தமிழ் நாட்டில் எந்த பொருளாதார வளர்ச்சியில் இல்லை, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடியாது என்று அப்ப வந்த CAG அறிக்கை காறி துப்பி விட்டது. ஆனா சினிமா மோகத்தை வச்சி மக்களை ஏமாற்றி, கடைசில் A1 கொள்ளைகாரி கிட்ட தமிழ் நாட்ட விட்டுட்டு போய்ட்டாரு.)

Bonus for those interested in facts and not inane bullsh!t:

இந்தியாவிலேயே தமிழ் நாடு இன்று முன்னேறிய மாநிலமாக இருக்க காரணம், கலைஞர் தான். 1971 இல் SIPCOT மற்றும் SIDCO உருவாக்கி மாபெரும் தொழிர்ச்சாலைகள் & வேலைவாய்ப்புகள் உருவாகினார். பிறகு 1977இல்ல ELCOT தொடங்கி அதான் மூலம் மின்னனு தொழிர்ச்சாலைகள் உருவாக்கி தொழிர்ரபுரட்சியை தமிழ் நாட்டில் தொடங்கினார். பிறகு 1991இல் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் உலகமயமாக்கள் இந்தியாவிற்கு கொண்டுவந்த பின், கலைஞர் 1997இல் இந்தியாவில் முதன் முதலாக I.T policy உருவாக்கினார். பிறகு 1999இல் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய I.T பூங்காகளில் ஒன்றாக TIDEL park உருவாக்கினார்.

இன்று அதில் உட்கார்ந்து கொண்டு தான் சில தற்குறிகள் “திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே”னு போன்ல பதிவு போடுதுங்க. அப்பலாம் இங்க I.T னா என்னன்னே பெரும்பாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்த பொழுது அதான் எதிர்காலத்தை உணர்ந்து I.T துறையை உருவாக்கி, கணினி கல்வியை கொண்டுவந்தார். மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்கு 1995-96இல் வெறும் 0.2% இருந்தது, அதை 2000 எட்டும் பொழுது 13% மாற்றி காட்டினார்.

ஜெயலலிதா எத்தனை I.T park அமைத்தார்னு யாராவது சொல்ல முடியுமா. சொல்லப்போனா ஓசூர் கிட்ட அமையவிருந்த I.T park திட்டத்தை திமுக போட்ட திட்டம்னு கிடப்பில தான் போட்டாங்க. (இப்ப திமுக மதுரையில ஒரு பெரிய I.T park மைக்கும் திட்டத்தை PTR அறிவித்திருக்கார்.)

இந்தியாவின் Detroit என தமிழ் நாடு புகழ் பேரும் வகையில் கார், பைக் தொழிர்சாலைகள் கொண்டுவந்தார். சேலம் இரும்பு ஆலையையும் கொண்டுவந்தவர் கலைஞர் தான்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு சாலை போக்குவரத்து infrastructure உருவாக்கியது 1996-01 கலைஞர் தான். முதன் முதலில் சிறு சிறு தெருக்களுக்கு கூட சிமன்ட் சாலை, குக்கிராமங்களுக்கு மினி பேரூந்து தொடங்கினார். பேரூந்து கட்டணங்களை தொடர்ந்து இந்தியாவிலேயே மிக மலிவாக வைத்துகொண்டார். கோயம்பேட்டில் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய பேரூந்து நிறுத்தம், கிட்டத்தட்ட 100 சிறு மற்றும் பெரு அணைகள், அரசு ஊழயர்களின் குடும்பத்துக்கு அனுதாப தொகை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கியது, சென்னை மெட்ரோ, தமிழ் நாடு முழுக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அம்மா கிளினிக் போல வெறும் ஒரு பாத்ரூம் கட்டி பலகை தொங்க விட்டவரல்ல), என்று இன்னும் பல.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை, Tamil Nadu Civil Supplies Corporation போன்றவற்றை கொண்டுவந்தார்.

கை ரிக்க்ஷாகள் ஒழித்தார், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்தவர், குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வித்திடவர். இன்று தமிழ் நாட்டில் 75% பேர் சொந்த வீடு வைத்துள்ளனர். Backward class/தாழ்த்தபட்டோர் என்பதை நீக்கி பிற்படுத்தப்பட்டோர் என்ற பதம் உருவாக்கினார். அது போல் ஊனமுற்றோர் என்ற பாதத்தை நீக்கி, மாற்றுத்திறனாளி என்ற பதத்தை கொண்டுவந்து, அவர்களுக்கு 3% இடஒதுக்கீடும் கொண்டுவந்தார். இன்னும் நூற்று கணக்கில் திட்டங்களை, infrastructure என்று உருவாக்கி தமிழ் நாட்டின் தலைஎழுத்தை மாற்றியவர்.

It's these things that gave common people a chance to improve their lives become determiners of their lives. Not random selection of rich men with caste backing as ministers.

ஆனால் இது எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன், பிறகு அரசியல் தெளிவு ஏற்பட்ட பின் வெளி வந்து விட்டேன். இங்கு கலைஞரை திட்டி பதிவு போடுபவர்கள் நாளை உணர்வார்கள்.

No comments: