Friday, September 21, 2018

பெண்களை அசிங்க படுத்துறதுதான் இந்த காவியங்களோட நோக்கமா?

இராமாயணத்துல சூர்ப்பனகை என்ற இராவணனின் தங்கை இராமன் மீது கொண்ட மோக உணர்வால் அவனை அடைய வேண்டி இராமனிடம் கேட்ட பொழுது சூர்ப்பனகையோடு மனம் 
குளிர பேசி விட்டு என்னால் முடியாது. நான் ஏக பத்தினி விரதன்.
என் தம்பி அர்ச்சுனனிடம் கேட்டு பார்.முடிந்தால் உன் ஆசையை பூர்த்தி செய்து கொள் என்று ஏளனம் 
செய்தவன் இராமன். இது போக 
அவள் மூக்கை வேற இரண்டு பேரும் 
அறுத்து விட்டாங்க.தர்மத்தின் 
ஊற்று இராமனோட லீலை.
மகாபாரதத்தில பாண்டவர்கள் ஐந்து 
பேருக்கும் பத்தினியா இருக்கிற பாஞ்சாலியை வைச்சிக்கிடுறதில 
அஞ்சு பேரும் ஒரு உடன்படிக்கை 
போடுறாங்க.ஒரு வருடத்துக்கு ஒருத்தன் கூட இருக்கனும்.
இந்த ஒரு வருடம் மற்ற நாலு பேரும் 
பாஞ்சாலி கூட ஒப்பந்த காரன் இருக்கிறதை பார்க்க கூடாது.
அப்படி பார்த்து விட்டால் ஒரு வருடம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
தருமனும் பாஞ்சாலியும் தனிமையில் இருக்கும் போது பிராமணனுக்கு ஏற்பட்ட துயரம் 
போக்குவதற்காக தன்னுடைய 
வில்லை எடுக்க அந்த அறையில் 
நுழைந்து விடுகிறான் .
இதனால் ஒப்பந்த விதி படி நாட்டை விட்டு போகிறான். போன இடத்துல 
கங்கையில களிச்சிகிட்டு இருக்கும் போது உலூபி என்ற நாக கன்னிகை 
அவன் அழகில் மோகம் கொண்டு 
அவனிடம் நேரடியாக முறையிடகிறாள்.அர்ச்சுனனும் அதை ஏற்று அவள் ஆசைய அன்று இரவு நிறைவேற்றினான்.
பெண்களை அசிங்க படுத்துறதுதான் இந்த காவியங்களோட நோக்கமா?
இராமன் கடவுள் அவதாரம்.
நினைச்சா சூர்ப்பனகை எண்ணத்தை மாற்றி இருக்கலாம்.
அதை செய்யாமல் ஏறுக்கு மாறா 
கிறுக்கு தனம் பண்ணி இராவணன் 
சீதாவை தூக்கிட்டு போற அளவுக்கு
ஒரு காரணத்தை உண்டாக்கணுமா?
அருமை அருமை.😐😐


அர்ஜுனன் ஒரு பெண்பித்தன் அவனது மனைவிகளுக்கு எண்ணிக்ககையே இல்லை..அல்லி எனும் மனைவி அவனுக்கு மிகவும் பிடித்தமானவள்..அல்லிஅர்ஜுனன் என்ற பெயரே அவனுக்கு உண்டு..அர்ஜுனனுக்கு போறஇடமெல்லாம் பொண்டாட்டி என்ற பழமொழியே உண்டு..இந்த ஒழுக்க சீலருக்குத்தான் அந்த கோபியர் கண்ணன் கீதை என்ற அறிவுரை கொடுக்கிறான்..வெட்கக் கேடு..இவர்களைவாழ்வியல் நாயகர்களாக கொண்டதால்தான் பார்ப்பனியம் ஒழுக்கக்கேட்டின் உறைவிடமாக இருக்கிறது.

வென்றவன் சொல்வதெல்லாம் வேதம் என்பதால் இப்படி எழுதியிருக்கிறார்கள் . இன்று எச்.ராஜா பேசுவதும் அப்படித்தான்



😐



வென்றவன் சொல்வதெல்லாம் வேதம் என்பதால் இப்படி எழுதியிருக்கிறார்கள் . இன்று எச்.ராஜா பேசுவதும் அப்படித்தான்

No comments: