Friday, September 21, 2018

பிள்ளையார் ஊர்வலத்தை முன்வைத்து ஓர் உரையாடல் .

பிள்ளையார் ஊர்வலத்தை முன்வைத்து ஓர் உரையாடல் .
சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு தமிழகத் தில் பிள்ளையார் சிலைகள் எண்ணிக்கை அதிகம் என மார்தட்டி , ஆன்மிக எழுச்சி என புழங்காகிதம் அடைந்தார் அந்த காவிசங்கி .
நான் பார்த்ததை ,விசாரித்து அறிந்ததை , தகவல் சேகரித்ததைக் கொண்டு அசை போட்டேன் .
தமிழகத்தின் எந்த மூலையில் பார்த்தாலும் பிள்ளையாரைக் கரைக்க ஊர்வலம் போகும் போது பத்து பதினைந்து விடலைப் பசங்கள் சீருடை பனியன் அணிந்து சென்றனர் மக்கள் கண்டு கொள்ளவே இல்லை .
சுற்றுச்சூழலை நீர்நிலையை மாசுபடுத்தாத பிள்ளையார் என்பதை இந்த வெறிக்கூட்டம் கிஞ்சிற்றும் மதிக்கவே இல்லை.சமூக அக்க றையோ ,பொதுநல சிந்தனையோ அற்ற மதவெறியே அதில் மேலோங்கி நிற்கக் காணலாம் .
இந்த விடலைப் பிள்ளைகள் ஆன்மீகம் ,மதம் எல்லாம் அறிந்தவரல்ல ; உசுப்பிவிட்டதால் நாக்கில் தேன் தடவியதால் வந்த கூட்டமே . போதையும் வெறிக்கூச்சலும் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது ஊர்வலத் தில் ஒலிபரப்பட்ட பாடல் கூட பெரும்பாலும் சினிமா குத்துப்பாட்டே ;சாமி பாட்டல்ல .
கொங்கு மண்டலம் சார்ந்த மோடிக்கு கடந்த தேர்தலில் ஆதரவு நல்கிய குமார் துரைசாமி கூறுகிறார் ,“வசூல் செய்வதும் ஊர்வலங்கள் நடந்துவதும் எனக்கு தெரிந்து 25 வருசங்க ளாக நடக்குது . அந்த அந்த பகுதியில் உள்ள 25 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் தாங்கள் நண்பர்களோடு இணைந்து செய்வார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு போய் விடுவார்கள். புதிய குழுக்கள் வருவார்கள்.
ஈரோட்டில ஒரு காலத்துல முன்னாடி நின்னு நடந்திய யாரும் அரசியலுக்கு வரவில்லை அவங்க அரசியல் கருத்தை இந்த விழா
முடிவு செய்யவில்லை,இப்பயாரும் முன்னாடி நின்னு நடத்திட்டு இருக்கவில்லை
இவரின் இந்த கணிப்பை நான் நிராகரிக் கவும் இல்லை ;அப்படியே ஏற்கவும் இல்லை .
தமிழகம் முழுவதும் சுமார் 25,000 பிள்ளை யார் என மிகக்குறைவாக கணக்குப் போட்டாலும், ஒரு பிள்ளையார் பின்னால் சுமார் 15 விடலைப் பையன்கள் என்று மிகக்குறைவாகக் கணக்குப் போட்டாலும் சுமார் ஆறு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களில் 2 சதம் பேரிடம் மதவெறி விஷம் ஏறினும் சுமார் 12,500 பேர் .
வருடாவருடம் இதேபோல் எனில் மெல்ல மத வெறி விஷம் ஏற்றப்படுகிறது.அதன் பேரா பத்தைப் புரிந்து முற்போக்காளர்கள் எதிர் வினை ஆற்றல் அவசியம்.மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் சிந்தனைக்குப் பின் விடலைப் பருவ இளைஞர்களை திரட்டல் மிகமிக அவசிய அவசரப் பணியாகும்,
"கோவையில் பெரும் பணக்காரர்கள் (இந்துக்கள்தான்) வசிக்கும் ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி (வனக்கல்லூரியை ஒட்டி உள்ள பகுதி), ரேஸ் கோர்ஸ் சாலை" ஆகிய பகுதிகளில் வினாயகர் சிலைகள் அநேக மாக இல்லை.
இந்த ஆட்சியால் பெரும்பாலும் லாபமடைந்த ஆதிக்க சாதிகளை சேர்ந்தவர்கள், பனியாக் கள்,மார்வாரிகள்,ஜெய்ன்கள்,யாரும் வினாய கர் பந்தல்களில் உட்கார்ந்திருக்கவுமில்லை.
வினாயகரின் அதிதீவிர பக்தைகளான பெண்கள் இல்லை. பண்பாட்டு நடவடிக்கை கள் இல்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகள் இல்லை. நமது கோவில்களில் வினாயகர் சதுர்த்தி அன்று இருந்த கொண்டாட்ட மனநிலை அறவே இல்லை.
உழைக்கும் வர்கங்களைச் சேர்ந்த இளைஞ ர்கள் பந்தலில் உட்கார்ந்திருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.
நமது பாரம்பரியத்திலிருந்து அன்னியப்பட்டு நிற்கிறது இந்த வழிபாட்டு முறை.” என்கிறார் இரா. முருகவேள்.
“இவர் சொல்வதில் உண்மையுண்டு .சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட போது கும்பிடவும் பூஜை செய்யவும் முண்டியடித்த பெண்கள் கூட்டம் இப்போது கிட்டத்தட்ட இல்லை.
மது போதை வாசம் மிக்க சில காலிகளின் பிள்ளைப்பருவ சேட்டையாய் மாறிக்கொண் டிருக்கிறது இப்பிள்ளயார் விழாக்கள் .இது இந்து முன்னணி ஏற்பாடு செய்யும் பிள்ளை யாரின் அவலம் மட்டுமே .பாரம்பரியமான பிள்ளையார் கோயில்களில் இன்றும் கூட்டம் முட்டி மோதத்தான் செய்கிறது .
“பிள்ளையாரை கேடயமாகி செங்கோட்டை யில் எச் ராசா வகையறா திட்டமிட்டு நடத்திய சிறுபான்மை மீதான தாக்குதல் அவர்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவவில்லை . மதக் கலவரமாக பற்றவில்லை.தமிழகம் மதவெறித் தீயில் பொசுங்கவில்லை.
இது மட்டுமல்ல .அண்மையில் சங்பரிவாரின் இத்தகைய முயற்சி எல்லாம் இந்தியா முழுவதும் ஒரு பக்க கொதிப்பாய்த்தான் முடிகிறது .
இந்தியாவெங்கும் இந்துக்களோ ,முஸ்லீம்க ளோ ,இதரர்களோ மதக்கலவரத்தை விரும்ப வில்லை .மக்கள் ஒற்றுமையை சீர்குலைப் போர் யாராயினும் மக்கள் நிராகரிப்பர் .
இதுவே நமக்கு நல்ல செய்தி .அவர்களுக்கு கெட்ட செய்தி .” என நான் இட்ட பதிவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதே .
ஆக ,’ ஆன்மீகப் பேரெழுச்சி” என்கிற சங்கிகளின் ஆரவாரக் கூச்சலைக் கண்டு மனம் தளரவும் வேண்டாம் ,மதவெறி நச்சை மெல்ல பரப்பும் அவர்களின் முயற்சியைக் குறைத்து மதிப்பிட்டுவிடவும் வேண்டாம் .
மதச்சார்பின்மைக்காகவும் அறிவியல் மற்றும் சமத்துவ விழிப்புணர்வுக்குமான நம் போராட்டம் ,முயற்சி அனைத்தும் இளைஞர் மாணவர் ,பெண்கள் மத்தியில் இன்னும் பலமடங்கு வீச்சோடும் நுடபத்தோடும் முன்னெடுக்கப்பட வேண்டும் .

No comments: