Sunday, June 06, 2021

நாடு என்ற சொல் அவர்களை அச்சறுத்தவே செய்யும்.

 நாடு என்ற சொல் அவர்களை அச்சறுத்தவே செய்யும்.
ஏனெனில் அவர்கள் நாடற்றவர்கள்.
நாடோடி கூட்டத்தினர்.
பிறதேசத்திலிருந்து வந்ததாலேயே பரதேசி என்று சொல் உருவானது.

தமிழகத்தில் வாழும் எந்தவொரு மதம், சாதியினரும் அந்தந்த வட்டார வழக்குகளில் தான் பேசுவார்கள்.

இவர்களோ கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை, வெச்சு, நோக்கு,நேக்கு, தோப்பனார், ஆத்திலே,த்வம்சம், பண்ணிப்புடுத்து,
அவாளை, வந்துண்டு, இருக்கச்சே, பேஷா இதுபோல் ஒரே மாதிரியாகப் பேசுவார்கள்.

அவர்களின் தாய் மொழி சமஸ்கிருதம்.
மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது சமஸ்கிருத மொழியின் படி மாநிலம் அமையவில்லை.
ஏனெனில் அது தேவபாஷா.
மற்ற மொழிகள் அனைத்தும் நீசபாஷா.

தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் அனைத்தும் மக்கள் மொழி.
சமஸ்கிருதம் மந்திரமொழி.
எனவே அது வளரவில்லை.
135 கோடி மக்களில் 24,000 பேர் வரை மட்டுமே நாளது தேதியில் பேசுவதாகச் சொல்லப்படும் மொழி.

ஒரு பொது மொழி,ஒரு பொது பண்பாடு,ஒரு பொது நிலப்பரப்பு இவற்றைக் கொண்டு வரலாற்றில் நீடித்து நிலைத்து வாழ்ந்த ஒரு இனமே தேசிய இனம்.அந்த இனம் வாழும் பகுதியே நாடு. பலநாடுகள் சேர்ந்த துணைக்கண்டமே இந்தியா.

எனவே தங்களுக்கான நாடு இது அல்ல என்பதால், நாடு என்ற சொல்லே இருக்கக்கூடாது என கதறுகிறார்கள். உரக்கச் சொல்வோம். இது தமிழ்நாடு தான்.

இவர்கள் மீதான கோபத்திற்கு ஒரே காரணம் தான்.
ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்த இந்த மண் மீதும், இங்கு வாழும் மக்கள் மீதும் இப்போதுவரை வெறுப்பு பாராட்டுகிறார்களே என்பது தான்.

சகலமும் உங்களது வேற
எங்களது வேற.

No comments: