Friday, December 14, 2018

வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம்

வாழ்க மனுதர்மம் !
வளர்க மனு நீதி!
வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம் !
2000 ஆண்டுகட்கு மேலாக மனு நீதிக்கு அடிமையாக இருக்கும் தமிழர்கள் பிணத்தைப் புதைப்பதிலும் சாதியவெறி கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் வியப்பென்ன ? 
மனு தர்மத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்காமல் மாந்தருக்கு உண்மையான விடுதலை கிடைக்காது !
" பார்ப்பனன் இறந்தால் (இரவிகுல மண்டலமுள்ள ) கிழக்கே உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டுபோ என்றும் ; சத்திரியனகா இருந்தால் (சாமராஜ்யபுரி மண்டலமுள்ள) வடக்கே கொண்டுபோ என்றும்; வைசியனாக இருந்தால்
(குபேர மண்டலமுள்ள) மேற்கே கொண்டுபோ என்றும் , சூத்திரனாக இருந்தால் (எமலோக மண்டலமுள்ள) தெற்கே கொண்டுபோ " என்றும் மனு கூறுகின்றார் .
சான்று : பக்கம் 86
சித்தாந்த சிந்தனை
டாக்டர் புரட்சிதாசன் , எம் . ஏ., வௌியீடு:பாண்டியன்பாசறை சென்னை 600 017

No comments: