Tuesday, October 02, 2018

செத்தாலும் சாதி போகாது

கொஞ்ச நாளைக்கு முன்னாடி friend ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருந்தேன் ..
எப்பயும் சாதி எதிர்ப்பு பேசுரவன் அவன் ...
தீடீர்னு ஒரு நாள் அவங்க வீட்ல சண்ட ஏன்டானு கேட்டேன் இல்லடா பாட்டி சாதி வச்சு திட்டிருச்சுன்னு சொன்னான் என்னடா சொல்றா புரிலன்னு கேட்டேன் ...
எங்க அம்மா அப்பா காதல் பண்ணி கல்யாணம் பண்ணாங்க அப்பா தலித் அம்மா ஒரு இடைநிலை சாதிய சேந்தவங்க அவங்க மத்த பேரன பாக்குற விதமும் என்ன பாக்குற விதமுமே வேற மாறி இருக்கும் சின்ன வயசுல இருந்து என்ன அவங்க தூக்குனதே கெடையாது வீட்டுக்கு போய் சாப்பிட்டாலும் என் தட்டுக்கு மட்டும் வித்தியாசம் இருக்கும் மத்த எல்லாருக்கும் கீரை சாதம் செஞ்சு உருண்ட புடிச்சு வாயில திணிக்கும் போது நா மட்டும் கைல வாங்கி சாப்பிடுவேன் சின்ன வயசு கதையெல்லாம் சொல்லும் போதே கண்ணுல தண்ணி அடக்கிட்டு இருந்தான் ..
நா பேச்ச மாத்த எல்லா கொஞ்ச நாளைக்கு தான் உங்க ஆத்தாலும் ஐயனும் எங்க அம்மையும் அப்பனும் சாகுற வரையும் தான் அப்பறம் எல்லாம் மாறும் னு சொல்கிட்டு இருந்தேன்.
அந்த நேரம் வீட்ட விட்டு கிழவி வெளிய வந்துச்சு ஒரு மொற மொராச்சுட்டு போச்சு ....
கொஞ்ச தொலவு கிழவி போற வரையும் ரெண்டு பேரும் அமைதியா பாத்துட்டு இருந்தோம் இன்னும் வாழுறதே கொஞ்ச நாள் தான் அப்படி இருந்தும் தான் பெத்த பொண்ணு பையன் மேல இவ்ளோ வன்மத்த கக்க வைக்குது சாதி !
ஒரு சிலர் சொல்றாங்க செத்தாலும் சாதி போகத்துன்னு அது இந்த மாறி ஆளுங்க நடமாடும் போது தெளிவா தெரியுது .

No comments: