Monday, October 01, 2018

பரியேறும் பெருமாள் - ஆனந்த் - ஒர் பார்வை

பரியேறும் பெருமாள் - ஆனந்த் - ஒர் பார்வை
தன்னுடன் படித்த​ SC/ST பிரிவு மாணவர்கள் இட​ ஒதுக்கீடு பெற்று உயர் கல்வியோ அரசு வேலையோ பெற்றால் இடைநிலை சாதியை சேர்ந்தவர்களுக்கும் (BC/MBC) மேல் சாதியை (OC) சேர்ந்தவர்களுக்கும் கடுப்பாக​ இருக்கும்.
தன் கடுப்பை நேருக்கு நேராக​ காட்டாமல் புறம் பேசுவார்கள். மேலும் தன் கல்விநிலைய​ whatsapp குழுமங்களில், தன் கல்விநிலைய Facebook group-களில் SC/ST இட​ ஒதுக்கீட்டிற்கு எதிரான பதிவுகளை share செய்வார்கள்.
தான் இருக்கும் whatsapp குழுமங்களில் Facebook group-களில் SC/ST இட​ ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு அவர்களை இழிவு செய்ய​ இவ்வாறு செய்வார்கள்.
தன் ஊரை/பள்ளியை/கல்லூரியை சேர்ந்த​ SC/ST-யினரை friend list-ல் வைத்து கொண்டு SC/ST இட​ ஒதுக்கீடு பெற்றவர்களின் சுயமரியாதையை இழிவு செய்யும் வகையில் போடப்படும் meme-களை பகிர்வார்கள்.
தங்களை இழிவு செய்ய​ தான் இவ்வாறு போடுகிறார்கள் என்பதை அறிந்தும் அவ்விடத்தில் பதில் கூறினால் பொதுதளத்தில் சாதி ரீதியிலான அடையாளம் தன் மீது விழுந்து விடும் என கருதி​ SC/ST இட​ ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் மவுனமாக​ இருப்பார்கள்.
அந்த​ கல்விநிலையங்களில் பயின்றவர்களில், அந்த​ ஊரை சேர்ந்தவர்களில் "பரியேறும் பெருமாள்" ஆனந்த்களும் இருப்பார்கள். அவர்கள் தான் இங்கே பதில் கூறுவார்கள். ஏன் இட​ ஒதுக்கீடு தேவை என்பதை சுட்டிகாட்டுவார்கள், பலநூறு ஆண்டுகளாய் SC/ST பிரிவினர்
ஒடுக்கப்பட்டதை எடுத்துரைப்பார்கள். இட​ ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல​ அது சமூகநீதிக்கான உரிமை என வலியுறுத்துவார்கள்.
ஆனால்..ஆன்ந்த்கள் பேச​ ஆரம்பித்ததும் 'இந்த​ குழுவில் அரசியல் பேச​ கூடாது" என்று சொல்லி ஆன்ந்த்களின் வாயை மூட​ முயல்வார்கள்.
அதாவது ஜாதி வெறியர்களை பொருத்த​ வரையில், இட​ ஒதுக்கீட்டை இழிவு செய்து பேசுவது அரசியல் பேசுவதில் வராதாம்! ஆனால் ஆன்ந்த்கள் அவற்றிற்கு பதில் கொடுப்பது மட்டும் அரசியல் பேசுவதில் வந்து விடுமாம்.
இவர்கள் போடும் தடையை மீறி ஆன்ந்த்கள் பேசினால் ஆனந்த்களுக்கு "இந்து விரோதி, கிறிஸ்தவ​ கைக்கூலி, அரேபிய​ அடிமை நாய்" என்ற​ பட்டங்களை கொடுப்பார்கள்.
பெரும்பாலான சமூகவலைத்தள​ group-களில் இதுதான் நிலைமை என தோழர்கள் கூறுகிறார்கள்.

No comments: