Wednesday, September 04, 2019

கொம்பு சீவிய இந்துத்துவா அமைப்புகள் வரமாட்டார்கள்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை இசுலாமியர்கள் வசிக்கும் தெரு வழியாக தான் எடுத்து செல்லவேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களை கொம்பு சீவி விட்ட இந்துத்துவா அமைப்புகள், தங்கள் பகுதிகளில் தங்களுக்கு எதிராக கோஷம் போட்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பெரும் மத கலவரம் உண்டாகும் என்று அமைதியாக ஒதுங்கிக்கொண்டனர் அப்பகுதி இசுலாமியர்கள்,

ஊர்வலம் இசுலாமிய தெருக்களில் இசுலாமிய எதிர்ப்பு கோஷத்துடன் கடந்துக்கொண்டு இருக்கும் போதே கடும் மழை ஆரம்பித்தது, ஊர்வலத்தை ஏற்பாடு செய்த இளைஞர்களில் சிலர் தெருக்களில் இருந்த மின் கம்பிகள் சிலை மீது படாமல் இருக்க கம்புகளை வைத்து தூக்கிவிட்ட தருணத்தில் சுமார் ஐந்து நபர்களுக்கு மின்சாரம் மிக மோசமாக தாக்கிவிட்டது,

இதை அறிந்த இசுலாமியர்கள் பதரிப்போய் ஓடிவந்து மின்சாரம் தாக்கியவர்களை தங்களின் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்,

யாருக்கு எதிராக ஊர்வலம் சென்றோமோ சென்ற இடத்தில் நமக்கு ஒரு பாதிப்பு என்றால் அங்கு உடனே வருவது நம்மை கொம்பு சீவிய இந்துத்துவா அமைப்புகள் வரமாட்டார்கள், இசுலாமியர்கள் தான் வருவார்கள் என்பதை குஜராத் மக்கள் உணர்ந்து இருப்பார்கள்,

மின்சாரம் தாக்கியவர்களின் இருவர் இறந்துவிட்டனர் மற்றவர்கள் கவலைகிடம்,!

No comments: