Wednesday, September 04, 2019

அண்ணாவை அதிர வைத்த என் .எஸ். கிருஷ்ணன்

(அண்ணாவை அதிர வைத்த என் .எஸ். கிருஷ்ணன் )தமிழ்நாட்டில் 1957ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது அறிஞர் அண்ணா போட்டியிடும் தொகுதிகள் தேர்தல் பிரச்சார மேடையில் பேசினார் என். எஸ். கிருஷ்ணன் அறிஞர் அண்ணா மேடையில் அமர்ந்து இருந்தார் அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் வேட்பாளராக நின்றார் என். எஸ் .கிருஷ்ணன் பேசும்போது   "இந்த தொகுதியில் அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் வேட்பாளராக நிற்கிறார் மக்களுக்காக அல்லும் பகலும் மக்களின் ஆரோக்கியத்திற்காக பாடுபட்டு வருகிறார் கை ராசிக்காரர்" என புகழ்ந்து பேசுவதை கண்ட அண்ணா திடுக்கிட்டார் தொடர்ந்து என். எஸ் .கிருஷ்ணன்  "இப்பேர்ப்பட்ட மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்க வேண்டும் ஆகவே மறந்தும்கூட மருத்துவருக்கு வாக்களித்து விட்டால் உங்களுக்கு யார் வைத்தியம் பார்ப்பார்கள்? சமூக சமுதாய தொண்டுகளை பூர்த்தி செய்து வரும் அறிஞர் அண்ணாவுக்கு வாக்களியுங்கள்" என்று பேசினார் கலைவாணர் என். எஸ் .கிருஷ்ணன் .(தொகுப்பு. அ .தமிழ் க்குமரன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஈரோடு )

No comments: