Friday, June 29, 2018

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?
-எஸ்வி.சேகர்-
இவரின் கூற்றில் ஒழிந்து கிடக்கும் உண்மையை நாம் விவாதிக்காமல் எளிதாக தவிர்த்து விட்டு கடந்து செல்வது யாரை ஏமாற்றும் செயல்..!!??
கூட்டுக் களவாணிகளில் பார்ப்பனர்களை மட்டும் குற்றம் சுமத்துவது ஒருதலை பட்சமாக இல்லையா.!?
நத்தம் நாயக்கன்கொட்டாய் 350 தலித் வீடுகளை கொளுத்தியது யார்.!? பார்ப்பனர்களா.!?
இளவரசன் கோகுல்ராஜ் நாகமுத்து சங்கர் முத்தழகு வை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1968 கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1978 விழுப்புரத்தில் 12 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1979 உஞ்சனையில் 5 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1992 வாச்சாத்தியில் 186 பழங்குடியின குடும்பங்களையும் துண்புறுத்தியும் 18 சிறுமிகள் பெண்களை வன்புணர்ந்து வன்கொடுமை செய்தது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
1995 கொடியங்குளம் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
அதை தொடர்ந்து நெல்லை விருதுநகரில் 75 பேரை அரிவாள் வீசி கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
இந்த கலவரத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தது யாரால்.!? பார்ப்பனர்களாலா.!?
1997 மேலவளவு 7 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2000 ம.புளிபங்குடி 3 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2002 திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலத்தை திணித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
2003 கண்ணகி முருகேசனை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2017 வடபழஞ்சி முத்தழகை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
கீரிப்பட்டி பாப்பாபட்டி நாட்டார்மங்களம் கொட்டக்காச்சியெந்தல் பஞ்சாயத்துகளில் தேர்தலை நடக்க முடியாமல் செய்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
தேசிய கொடியை தொட்டதற்காக சொட்டத்தட்டி பஞ்சாயத்து தலைவரை செருப்பால் அடித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் பெருமாள் முருகனை முடக்கியது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது கொடூர தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
நந்தினியை வன்புணர்ந்து கொன்றது யார்.!?
பார்ப்பனர்களா.!?
ஆக வன்முறையிலும் கலவரத்திலும் ஈடுபடும் கூட்டுக் களவாணியான பெருந்திரள் வாக்குவங்கி இடைநிலை சூத்திர சாதி இந்துக்களையும்​ இக்கணம் விமர்சிப்பதை விட்டுட்டு
மற்றொரு கூட்டுக் களவாணியான எஸ்வி.சேகர் போன்ற பார்ப்பனர்கள் மீது மட்டும் ஒட்டு மொத்த பழியையும் சுமத்த முயல்வது தூற்றுவது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் பித்தலாட்டம் ஏமாற்றுவேலை

No comments: