Monday, July 02, 2018

இந்துக்கள் vs பட்டியல் சமூகத்தினர்

1) யாரெல்லாம் இந்துக்கள் என்று இந்து மத வேதம் கூறுகிறது?



    பிராமனர், ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்ற நான்கு பிரிவுகளை ஒப்புக்கொண்டவர்கள் இந்துக்கள் என இந்து மத வேதம் கூறுகிறது.




2) இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமான வர்ணாஷ்ரம தர்மா என்றால் என்ன?

      பிராமனர் - புரோகிதம் தொழிலை செய்பவர்.
   
      ஷத்ரியர் - போர் புரியும் தொழிலை செய்பவர்.

      வைசியர் - வானிபம் செய்பவர்.


      சூத்திரர் -  ஏவல் தொழில் செய்பவர்.


அதாவது மேல் உள்ள மூன்று வர்ணத்தார்கும் அடிமை தொழில் செய்பவர்.  மேல் உள்ள வர்ணத்தாரின் தேவையை பூர்த்தி செய்பவர்.



      இந்த வர்ணங்களில் இருக்கும் சந்ததிகள் அந்த வர்ணத்திற்குரிய தொழில்களை செய்ய வேண்டும்...

 வேறு வழியல்லையேல் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யலாம் ஆனால் தனக்கு மேல் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யக்கூடாது.

 திருமணத்திற்கும் இதே முறைதான்... தன் முதல் மனைவி தன் வர்ணத்திலும் அடுத்தடுத்த மனைவிகள் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்கலாம் ஆனால் தன் மேல் நிலையிலுள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்க கூடாது...




3) பட்டியல் சமூக மக்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகின்றனர்?


            இந்த கேடுகெட்ட வர்ணத்தை ஏற்காமல் புத்தரின் நெறிக்கொள்கையை பற்றி பிடித்தவர்கள்தான் இன்றைய பட்டியல் சமூகத்தினர் ... இவர்கள் இந்த இந்து மத வர்ணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள்.



4) பட்டியலினத்தைச் சார்ந்த சாதிகளை(SC)  இந்தியா முழுவதிலும் எதனடிப்படையில் பட்டியலிட்டனர்?

               பட்டியல் இனம்  (SC) பத்து நெறிமுறைகளை கொண்டு பிரிக்கப்பட்டனர்...

அவையாவன ::


1) பிராமணர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் என்பதை மறுத்தவர்கள்.

2) பிராமண குரு மற்றும் அங்கிகரிக்கப்பட்ட வேறு இந்து குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள்.

3) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள்.

4) பெரிய இந்துக்கடவுளர்களை வழிபடாதவர்கள்.

5) பிராமனர்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள்.

6) பிராமண புரோகிதலர்களை வைத்து எந்த நிகழ்ச்சிகளையும் செய்யாதவர்கள்.

7) சாதாரண இந்துக் கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதவர்கள்.

8) தீட்டு ஏற்படுத்துவதாக கூறப் படுபவர்கள்.

9) தங்களின் இறந்தவர்களை புதைப்பவர்கள்.

10) மாட்டிறைச்சி உண்பவர்கள்.

இந்த பத்து கோட்பாட்டின் அடிப்படையில் 1911 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இவ்வாறு பட்டியலிடப்பட்டனர்.





5) இந்துக்களாக கருதப்பட்டிருந்தால் இந்தியா முழுமைக்கும்

 ( இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் காகாலத்தில் இந்தியா ஒரு நாடாக இல்லை. எண்ணிலடங்கா நாடுகளாக இருந்தது.)

 ஏன் பட்டியல் சமூக மக்கள் ஊருக்குள் இல்லாமல் தனியாக சேரியில் தங்கினார்கள்?

        மற்ற சாதி இந்துக்களால் ஒதுக்கப்பட்டதாலும்...
இவர்கள் அவர்களிடம் இருந்து ஒதுங்கியதாலும் சேரிகளில் தனிமை படுத்தப்பட்டனர்.

No comments: