Tuesday, July 03, 2018

எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள்

இன்று திருமா அவர்கள் திமுக வை யாரும் அழிக்க முடியாது என்ற கருத்து கூறியவுடன் அதற்கு சங்கிகள் பதறியிருக்கறார்களோ இல்லையோ தலித் அரசியல் பேசுபவர்கள் அதிகமாக பொங்கியுள்ளார்கள். இவர்களுக்கு சமூக நீதி முக்கியமா அல்லது திராவிடமும் தலித்தியமும் பிரிவது முக்கியமா என்றால் கண்ணை மூடி கொண்டு திராவிடமும் தலித்தியமும் பிரிவது தான் முக்கியம் என்று கூறுவர்.
அவர்கள் செய்வதை பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை‌. தமிழ் தேசியம் இந்திய தேசியம் என எதை எதையோ தூக்கி கொண்டு வந்து கடந்த நூறு வருடங்களாக திராவிடத்தை அழிக்க பலரும் பல வழியில் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பலவும் விழலுக்கிறைத்த நீராக வீணாக போனது தான் வரலாறு. உண்மையில் இந்திய தேசியம் தமிழ் தேசியம் ஆகியவற்றை தூக்கி பிடித்ததும் திராவிடம் தான். திமுக தான்.
சீனாவுடனான போர் என்று வந்தவுடன் இப்பொழுது நமக்கு நம் நாடு தான் முக்கியம் என்று நாட்டுப்பற்றுடன் அதற்கான நன்கொடையையும் அதிகமாக வசூலித்து அனுப்பியவர்கள் திராவிடர்கள் தான். அண்ணா அவர்களின் பேட்டிகளில் உள்நாட்டு பேட்டிகளில் பத்திரிக்கைகளில் மத்திய அரசையும் இந்திய தேசியத்தையும் கிழித்து தொங்க விட்டிருப்பவர் அமெரிக்கா மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொடுத்த பேட்டிகளில் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட மாநிலத்தின் முதல்வராக தனது நாட்டையும் தனது அரசையும் விட்டு தராமல் தான் பேசியிருப்பார்.
தமிழுக்கு திமுக செய்ததை பேசினால் அதற்கென்று ஒரு நூலகம் அமைத்து அந்த புத்தகங்களை அடுக்கும் அளவிற்கு இருக்கும். முதன்மையாக முக்கியமாக சில குறிப்புகள் சொன்னால்
1. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.
2. இருமொழி கொள்கை
3. திருக்குறளை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தது. இது முக்கியமான ஒன்று. பச்சை தமிழன் என்று சொல்லப்படும் காமராஜர் ஆட்சியிலும் சரி தமிழ் மன்னர்களின் ஆட்சியிலும் சரி திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்லவே இல்லை. இராமாயணத்தையும் பாரதத்தையும் சிரமேற்கொண்டு மக்களிடம் சேர்த்த அவர்கள் திருக்குறளை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிற்கு பிறகு தான் பேருந்தில் திருக்குறளை கொண்டு வந்தது, திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட வைத்தது, குமரி முனையில் வள்ளுவரை நிறுத்தியது என்று அதனை எல்லாரிடமும் கொண்டு சென்று சேர்த்தனர்.
4. தனித்தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது திராவிடர் கழகத்தின் மூலமாக ஒரு கொள்கையாக ஒரு முன்னெடுப்பாகவே தொடங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று வாய் கூசாமல் பொய் பேசி இன்று பொய்யான பரப்புரைகளை செய்து வருகின்றனர். அவர்களையும் நாங்கள் கடந்து வந்தவர்கள் தான்.
இன்று ஒரு கூட்டம் எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகிறேன். அவர்கள் வந்து திராவிடம் தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்லி கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் தலித்துகளின் நிலை மற்றும் அவர்களுக்காக தொடங்கப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் தமிழ்நாட்டில் அவர்களுக்கென திமுக செய்ததையும் ஒப்பிட்டாலே அவர்களுக்கு புரியும். இதை நாங்கள் எடுத்து சொன்னாலும் சொல்லி காட்டுறியா... இதான் டா உங்க சூத்திரபுத்தி என்று அவர்களின் சாதி ஒழிப்பு மனநிலையை அப்பட்டமாக காட்டுகின்றனர்.
பண்றது தான் பண்றாங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும் னு பார்த்தா அம்பேத்கரை என்னவோ அவர்களுக்கு மட்டுமான தலைவராக சித்தரித்து அவரை ஒரு இனத்திற்கான தலைவராக மட்டும் சித்தரிக்கிறார்கள். உலகின் மாபெரும் சிறந்த சிந்தனைவாதி ஆகச்சிறந்த அறிவாளி போற்றத்தக்க பொருளாதார நிபுணர் ஆகிய அம்பேத்கரை இப்படி ஒரு கூண்டுக்குள் அடைக்க முயல்வது அவருக்கு செய்யும் துரோகம் தான்.
நீங்கள் சொல்வதால் அம்பேத்கரை விட்டு விட்டு செல்ல முடியாது. வள்ளலார், இராமானுஜர், பசவர் ஆகியோரின் வரிசையில் அவரையும் பார்ப்பனர்களிடம் பறிகொடுக்க நாங்கள் தயாராய் இல்லை.
ஜெய் பீம் என்பதை என்னவோ அவர்களுக்கான வாசகமாகவே நிறுத்த முயல்கிறார்கள். அதை நீங்கள் எவ்வளவு பாடுபட்டாலும் அடைய முடியாது. அவர் எங்களுக்குமானவர். எல்லாருக்குமானவர். பெருமையாக சொல்வேன். உரத்து சொல்வேன். திரும்ப திரும்ப சொல்வேன்...
ஜெய் பீம் 🖤🖤🖤
ஜெய் பீம்💙💙💙
ஜெய் பீம் ❤️❤️❤️

No comments: