Friday, July 06, 2018

பாரிசாலன் பூரி சால்னா

கொஞ்ச நாள் முன்பு திடீரென கொஞ்ச நேரம் பாரிசால்னா என்ற பெயர் சோமீயில் அடிபட்டது. யார்ராவன் என்று பார்த்தால், இலுமினாட்டிகளே உலகின் சகல துன்பங்களுக்கும் காரணம் எனும் தத்துவத்தை பரப்பும் கோமாளி கூட்டத்தின் விஐபி கோமாளி.
சால்னாவின் ஒன்னு ரெண்டு வீடியோக்களை பார்த்தேன். ச்சே இவ்வளவு நாளா இவனை தெரிஞ்சிக்காம ஆதித்யா சேனல காசு கொடுத்து வாங்கிட்டமேன்னு என்னை நினைச்சி எனக்கே வெக்கமாகி, உடனே கண்ல தென்பட்ட ஒரு பெண்மணியின் பதிவில் போய் ஆணாய் பிறந்ததற்கே அவமானப்படுகிறேன் டோலின்னு கமெண்ட் போட்டேன். அவசரத்தில் சமையல் குறிப்பு பதிவில் வந்து அப்படி ஒரு கமெண்ட் போட்டு கன்பூஸ் செய்ததற்கு மன்னிச்சு டோலி.
சால்னா ஒரு முக்கிய யுட்யூப் ஸ்டார், ஆனால் எங்கு முக்குவது என்பதை புரிந்து கொள்ளாமல் பைக் சர்வீஸுக்கு விட்ட இடத்தில் போய் முக்கியிருக்கிறார். அங்கு தகராறாகிவிட்டது. உடனே அண்ணன் யுட்யூபுக்கு போய் பைக் கம்பெனி non-தமிழன் நடத்துவது நானோ ஒரு naam-தமிழர் என்று வீடியோ போட, தமிழன் என்று எவன் சொன்னாலும் நட்டுக்கும் (முடியை சொன்னேன்) கூட்டம் ஒன்று போய் பஜாஜ் சர்வீஸ் செண்டரின் ஊழியர்களை தாக்க, சால்னா உட்பட பலருக்கும் முகத்தில் தக்காளி சாஸ். இருவருமே ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுக்க, போலீஸ் சால்னாவை பிடித்து உள்ளே வைத்துவிட்டது.
இப்ப அண்ணன் மேல் விவிடி நிறுவனம் வேற வழக்கு போட்டிருக்காங்களாம். அதாவது விவிடி நிறுவனம் விற்பது தேங்காயெண்ணெயே அல்ல என்று சால்னா ஆதாரமில்லாமல் கிளப்பி விட்டதற்காக காண்டாகி அவதூறு வழக்கு போட்டிருக்கிறார்கள். சரி படம் முடிஞ்சிடுச்சி, எதிர்பார்த்த ஐந்து நிமிட புகழ் கிடைச்சிடுச்சி இனி காணாம போய்டுவான்னு நினைச்சா அங்கதான் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ். இன்னிக்கி திடீர்னு ஐ_சப்போர்ட்டு_பாரிசாலன் டொக்கு (tag) கிளம்பியிருக்கு.
அதாவது சால்னா பேசிய “தமிழ் தேசியத்துக்கு பயந்து நடுங்கியே இவர் மீது இத்தனை வழக்குகள் என்றால் தமிழ் தேசியம் என்ற சிந்தனை திராவிட, இந்திய கும்பலுக்கு எத்தனை கலக்கத்தை உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்” என்கிறார்கள் சால்னா ஆதரவாளர்கள்.
அதாவதாகப்பட்டது 43 பேருக்கு தெரிந்த பாரிசாலன் ஒரு போராளி, அவன் சொல்லும் டுபாக்கூர் கதைகள் தூங்கிக்கொண்டிருக்கும் தேசிய மைனாக்களை எழுப்பி, அதனால் புரட்சி வெடித்து, அதனால் எடப்பாடி அரசு கவிழ்ந்து, எதுக்கு ப்ரச்னைன்னு பயந்து போய் அரசாங்கம் அவனை கைது செய்து.. நினைச்சாலே தலைசுற்றல், வாந்தி, மயக்கம் முதலிய பத்து வித ஸ்கின் ப்ராப்ளம்ஸும் வருதா? எனக்கு
சின்ன வயசில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு ஊரில் சேறு கபோதிதா என்ற பெயர் கொண்ட கொசு ஒன்று இருந்தது. யாரும் கேட்காமலே தான் பலான விஷயத்தில் பலான பலான ஆள், 180 நிமிடங்கள் நிற்காமல் செயல்படுவேன் என்றெல்லாம் கண்டபடி சவடால் விடும். ஒரு நாள் டேய் போதும்டா போன் ஒயர் பிஞ்சி ரெண்டு வாரம் ஆயிடுச்சி என்று யாரோ பேச்சு வாக்கில் சொல்லிவிட கொசுவுக்கு அவமானமாக போய்விட்டது. ரோஷப்பட்ட கொசு நான் யானையை ‘செஞ்சி’ காட்றேன் என்று சவால் விட்டு தனது யுட்யூப் ரசிகர்களை எல்லாம் யானை லாயத்துக்கு வரச்சொல்லி ரசிகர்கள் எல்லாம் வந்ததும் கொசு போய் யானையின் பின்பக்கம் உட்கார்ந்து கொண்டது. ரொம்ப நேரமாக சத்தமே இல்லை. ரசிகர்கள் சஸ்பென்ஸோடு இருக்கிறார்கள். அப்ப பார்த்து ஒரு தேங்காய் எதேச்சையாக யானை தலையில் விழ, யானை பிளிற, உடனே கொசு யானையைப் பார்த்து “வலிக்குதா?” என்று கேட்டுவிட்டு யுட்யூப் ரசிகர்களை பெருமிதமாக பார்க்க, ரசிகர்கள் ஐ_லவ்_கொசு என்று டேக் போட்டு பதிவு எழுதினார்கள். சுபம்!

No comments: