Thursday, July 05, 2018

நல்லறிவை ஏன், ஏற்றுக்கொள்ளக்கூடாது - அறிஞர் அண்ணா

" நமது சவுகரியத்திற்காக ரூபாய்க்கு 16 அணா என்று இருந்ததை 100 புதுக்காசுகளாக மாற்றிக் கொள்ளவில்லையா? அகல் விளக்கு இருந்த அன்றையக்காலம் மாறி - இதோ இங்கு எரியும் பெட்ரோமாக்ஸ் வரவில்லையா? மின்சார விளக்கு நகரத்திலே மற்ற மற்ற இடத்திலெல்லாம் ஒளிவிடவில்லையா?
இதையெல்லாம், நம்முடைய முன்னோர் ஏற்படுத்திய ஏற்பாடு, மீறக்கூடாது என்றென்ணணி அகல் விளக்கையும், குத்துவிளக்கையுமா வைத்துக்கொண்டிருக்கிறோம்? எங்கோ இருந்து இங்கு வந்தவன் புகுத்திய விஞ்ஞான அற்புதங்களையெல்லாம் ஏற்றுக் கொள்கிறோம். அனால் பன்னெடுங்காலமாக, நமது சமுதாயத்தை பாழ்படுத்திவரும், நச்சுக் கருத்துக்களை - நாச எண்ணங்களை, புராணக் குப்பைகளை தூர எறிந்துவிட்டு, புதுமை கருத்துக்களை புத்துலக வலுவாற்றை- விஞ்ஞான நல்லறிவை ஏன்,
ஏற்றுக்கொள்ளக்கூடாது? "
- அறிஞர் அண்ணா .

No comments: