Monday, July 02, 2018

விவசாயம் - 3

சில வாரங்களுக்கு முன் விவசாயத்தில் சாதியம் பற்றியும், சாதிய அமைப்புக்கு விவசாயத்தின் தொண்டு பற்றியும் எழுதியதற்கு நானே எதிர்பார்த்திராத வகையில், பலர் தன் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து இதைப் பற்றி மேலும் பேசுவது அவசியமான ஒன்று, மேலும் தொடர்ந்து எழுதுங்கள் என கூறியிருந்தனர்.
சாதிய அமைப்புக்கு அடுத்து விவசாயத்தில் நடக்கும் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், குழந்தைகளை விவசாயம் மற்றும் அது சார்ந்த வேலைகளில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்க்கையையும், குழந்தை பருவத்தையும் அழிப்பது.
இதைப்பற்றி நான் எழுதுவதற்கு காரணம் விவசாயத்தை அழிப்பதற்காகவோ, நான் அதன் எதிராளியோ அல்ல. என்னுடைய அவா அனைத்தும் விவசாயத்தின் குறைகள் களையப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவற்றைப் பற்றி விழிப்புணர்வாவது மக்களிடம் வர வேண்டும். ஒரு சிலர் அறிவாளிகள், வேற எந்த தொழிலிலும் இதெல்லாம் இல்லையானு கிளம்பி வராதீங்க.
According to the Child Labour Act, 1986, a complete prohibition has been imposed on employment or involvement of child labour (A person below the age of 14) in any establishment whether hazardous or not. An amendment was made to the CL Act in 2016 and it was changed to Childhood and Adolescent (Prohibition and Regulation) Labour Act 1986. According to this law, children between 14 to 18 can be involved in helping the family after the school hours or during vacation.
இந்த கொடுமை விவசாயத்தில் சர்வ சாதாரணமாக அரங்கேறும். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அது தவறே இல்லை என்று வேற வாதாடுவார்கள். யோசித்து பாருங்கள் எத்தனை குழந்தைகளின் குழந்தைப் பருவம் அழிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கப் பட்டிருக்கிறது. உடனே, நானும் விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன், நானும் வயலில் வேலை செய்து தான் வளர்ந்தேன், நான் நல்லா தான் இருக்கேன்னும் சொல்லிட்டு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறது.

No comments: