Monday, July 02, 2018

எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு. - எடப்பாடி எங்கிருந்து வந்தார் என்று புரிகிறதா

எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு.
தமிழக மக்கள் செய்த மிகப்பெரிய தவறு
காமராஜரை தோற்கடித்தது அல்ல. எம்.ஜி.ஆரை ஜெயிக்க வைத்தது தான்.
1975ல் இந்திராகாந்தி அமல்படுத்திய
எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநிலம்
தமிழ்நாடு.அப்போதைய முதல்வர்
கலைஞர்.
எம்.ஜி.ஆர் பயந்து டெல்லி சென்று
எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக செயற்குழுவை கூட்டி எமர்ஜென்சிக்கு
எதிராக தீர்மானம் போட்டார் கலைஞர்.
அதிமுக பொதுக்குழுவை கூட்டி
ஆதரவாக தீர்மானம் போட்டார்
புரட்சித் தலைவர்.
எமர்ஜென்சியை எதிர்க்கும் மாநில
கட்சியை தடை செய்வோம் என்றார்
இந்திரா.முடிந்தால் திமுகவை தடை
செய்து பாருங்கள் என்றார் கலைஞர்.
தன் கட்சிப் பேரையே அனைத்திந்திய
அதிமுக என்று மாற்றினார் MGR.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்
ஜனநாயக காற்று வீசுகிறது என்றார்கள்
வடமாநில அரசியல்வாதிகள்.
அப்படிப்பட்ட கலைஞரை மீண்டும்
தேர்ந்தெடுக்காமல் 1977-ல் MGR-ஐ
முதல்வராக்கினர் தமிழக மக்கள்.
அப்போது மட்டும் மக்கள் கலைஞரோடு
நின்று அவர் கரத்திற்கு வழு
சேர்த்திருந்தால் தமிழகம் இன்னும்
வேறு உயரத்திற்கு சென்றிருக்கும்.
ஜெயலலிதா,எடப்பாடி என்று
கலைஞரின் ஆளுமைக்கு நிகரில்லாதவர்கள் எல்லாம் திமுகவுக்கு
மாற்றாக ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.வேறு ஒரு தகுதியான
மாற்று கட்சியாவது வந்திருக்கும்.
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்" என்று சினிமாவில்
பாடிய MGR சினிமாவில் மட்டுமே
ஹீரோவாக இருந்திருக்கிறார்.
"தென்றலைத் தீண்டியதில்லை
தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று
வசனம் எழுதிய கலைஞர் நிஜத்திலும்
ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார்...
எடப்பாடி எங்கிருந்து வந்தார்
என்று புரிகிறதா.??

No comments: