Monday, July 02, 2018

அசுரர்களிடம் குறியீடு முறை - ஆரியர்களிடம் எழுத்து முறையே கிடையாது

எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு அடுத்தவர்களுக்கு ஒரு கருத்தை தெரியப்படுத்த பேச்சினால் மட்டுமே முடியும். எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு பேசாமல் எழுத்தினால் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
தஜிகிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாயை கடந்து முதன் முதலில் ஆரியர்கள் அசுரர்களிடம் வியாபாரத்தொடர்பை ஏற்படுத்திய பொழுது அசுரர்களிடம் குறியீடு முறையிலான எழுத்து முறைகள் இருந்தன. ஆனால் ஆரியர்களிடம் எழுத்து முறையே கிடையாது. அதாவது அவர்களிடம் கல்வியறிவே இல்லை. ஆதாவது கி.மு 1800 வரை கூட ஆரியர்களுக்கு குரல் மூலமாக செய்திகளை கடத்த முடியுமே தவிர எழுத்து மூலமாக எதையும் உணர்த்த தெரியாது.அதற்கு பலகாலம் பிறகு கூட அவர்கள் எழுத படிக்க கற்றுக்கொள்ள சிரமப்பட்டனர்.
ஆக அரக்கர்கள் ஆரம்பம் முதலே கல்வியறிவுடன் இருந்தவர்கள்தான். நம்ம பிள்ளைங்களுக்கு எல்லாம் படிப்பு வராது என்று நினைத்தால் அந்த எண்ணத்தை கைவிடுங்கள்.
( வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தில் இருந்து புரிந்து கொண்டது )


No comments: