Tuesday, July 03, 2018

கமலும் பிராமணர் சங்கமும்



கமலின் வாழ்க்கையில், குறிப்பாக மண வாழ்வில், சறுக்கல்கள் உண்டு. வாணியோடு திருமண பந்தத்தில் இருந்த போதே சரிகாவோடு தொடர்பு. அப்புறம் திருமணம் ஆகாமலே இரண்டு மகள்கள். அப்புறம் சிம்ரன், கௌதமி என்று நீண்ட வரலாறு. இதையெல்லாம் கமலும் மறைத்ததில்லை. அப்போதெல்லாம் பிராமணர் சங்கத்துக்கு எந்த அவமானமும் வந்துவிடவில்லை ஆனால் தனக்கு பூணூல் பிடிக்கவில்லை என்று சொன்ன போது மட்டும் வெகுண்டெழுகிறார்கள். ஹ்ஹ்ம்ம்ம்

பூணூல் பார்ப்பனர் ,க்ஷத்ரியர் ,வைசியர் என மூன்று வர்ணங்களுக்கும் உண்டு .சூத்திரர்களுக்கு தான் கிடையாது 

ஒவ்வொரு வர்ணத்துக்கும் பூணூல் நூல் மாறுபடும்.போடும் முறையும்,வயதும் மாறும்,பூணூலை வைத்தே வர்ணத்தை,உட்பிரிவை கண்டுபிடித்து விடலாம்.இதனால் தான் பல இந்து கோவில்களில் பூணூல் மட்டும் அணிந்து அரைநிர்வாணமாக ஆண்கள் வர வேண்டும் என்ற விதி இருந்தது,இருக்கிறது 

கமல் பொதுவாக பிடிக்காத நூல் பூணூல் என்று தான் சொன்னார். பூணூல் அணியும் வழக்கம் கொண்ட இந்து மதத்தை சார்ந்த மூன்று வர்ணங்களில் பார்ப்பன சங்கங்கள் மட்டும் பொங்குவது வியப்பாக இருக்கிறது

No comments: