Monday, July 02, 2018

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம்

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம் அதற்கு கோவிலுக்கு பரிகாரம் செய்யவேண்டும் அதாவது தீட்டுகழித்து சுத்தம் செய்யவேண்டும்..
சொல்வது யார்.. மந்திரியென்றும் பாராது மந்தியைப்போல காலடியில் அமர்ந்து .. சென்றவுடன் பழைய கும்பகோணமடமாகிய காஞ்சி மடத்தை சுத்த செய்து தீட்டு கழித்தார்களே அந்த பொன்னர் சொல்கிறார்..
ஆதிதிராவிட சகோதரன் கை பட்டால் தான் தீட்டு ஆனால் பார்த்தாலே தீட்டென்று .. பனைமரத்தில் ஏறி நிற்கிறவனின் நிழல் கூட படகூடாதென்று அந்த வழியே அந்தணன் (பாப்பான்) போனால் மட்டை தட்டி ஓசை எழுப்பவேண்டும் இவர் சொல்கிறார்..
ஸ்டாலினால் நாத்திகன் வந்து போனதால் ஸ்ரீரங்கம் கோவிலை சுத்தம் செய்யவேண்டும்..
..
ஆத்திகர்களின் அயோக்கியத்தனங்கள் மதமென்ற பெயரில் ..இந்து கிருஸ்துவ இஸ்லாமிய மத குருக்களின் காமலீலைகள் நாடு கண்டு சிரிக்கிறது.. துறவி வேசம் போடுகிறவன் மத போதகன் வேசம் கட்டி சோக்காலி வாழ்க்கை வாழ்கிறான்.. இதில் சங்கராச்சாரியார் ஜகத் குரு என்று சொல்லி ஜெயேந்திரர் ஆடிய ஆட்டத்தை அந்த சமூகத்து எழுத்தாளரே ..பகிரங்கமாக குற்றம்சாட்டியதும்..
பி.ஜே எனும் நவீன இஸ்லாமிய போதகன் காமகளியாட்ட ஒலிநாடா வும்..பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்ததும்.. ஆன்மீகத்தின் உண்மைதன்மையை .. ஆன்மீகம் என்ற பெயரில் அடிக்கிற கூத்திற்கு license உரிமம் வழங்கபட்டதைப்போல நாடே காரி உமிழ்கிறது..
மதபோதை மக்களின் சிந்தனை திறனை மழுங்கடித்து செய்யும் கேடுகெட்ட செயல்களை நியாயபடுத்த வைக்கிறது.. பி.ஜேவின் அடிவருடிகள்.. தனிநபரின் தவறுக்காக அவரின் தவறிய நிலையில் முன் போதித்த நல்லவகைகளை மறக்க கூடாதென்று பேசுகிற நிலை இதுவொருவகை மூளைச்சலவை ...நம்பியவரின் நடத்தைகளை நியாயபடுத்தி சுக்கான் பிடிக்கும் அயோக்கியத்தனம்.. அது ஜெயேந்திரர் விடயத்திலும் நடந்தது..
ஒருசிலரின் தவறை எப்படி ஆன்மீகத்தோடு சேர்ப்பதென்ற கேள்வி எழாமல் இல்லை.. அவர்களை பின்தொடர்கிற கூட்டத்தையும் சேர்த்து வழிகெடுப்பதைதான் எதிர்க்கிறோம்..
..
ஸ்டாலின் பொட்டை அழித்தாரென்று புலம்பி தீர்க்கும் பொன்னர்.. இந்தியாவின் முதல் குடிமகனை காவலாளி கைப்பிடித்து கோவிலுக்கு நுழையவிடாமல் தடுத்தது குறித்து பேச மறுக்கிறார்.. தொடர்ந்து ஸ்டாலினைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் மோடியின் எட்டுவழிச்சாலை துரோகத்தை மக்கள் மறந்துவிடுவாரென நினைக்கிறார்.. இதே கோவிலுக்கு யாரென்றே தெரியாத ஒரு பாப்பான் பூணூலோடு வந்தால் காவலாளி தள்ளிவிடுவானா..? .. தேசத்தின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. இங்கே நீயாராக இருந்தாலும் பூணூல் இல்லையென்றால் அதுவும் தாழ்த்தபட்டவனென்றால் அடி உதை மிதிதான்.. எந்த கொம்பனாக இருந்தாலும் .. இதுதான் மதம் ஆன்மீகம்..
இவர் வேண்டாமென்கிற நாத்திகம் ..
மனிதனை சகமனிதனாக பார்க்க சொன்னது ஏற்றதாழ்வில்லை.. உன்னைப்போலவே அவனுக்கு சகலஉரிமைகளும் உண்டு.. அதேபோல பாலின வேறுபாட்டைச்சொல்லி கூடுதல் குறைவென்று பிரிப்பதை எதிர்த்தது..
பொன்னரும் எச்சையும் சமமானவர் என்றது.. எல்லோருக்கும் கல்வி ... அவனவன் விருப்பபடி உண்ண உடுத்த .. வாழ உரிமை ஒரே வார்த்தையில் சொன்னால் நல்லதை சொல்லும் நாத்தீகம்.. 
..
பொய் புரட்டு ஏமாற்று ஏற்றதாழ்வென ஆன்மீகத்தோடு வாழ்வதைவிட.. நாத்திகன் எனும் சொல் நல்லது பொன்னரே..

No comments: