Monday, July 02, 2018

மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே தவிர சாதி சான்றிதழை கிழித்தால் அல்ல

சாதி சான்றிதழை கிழித்தால் சாதி ஒழியுமென்ற அதிமேதாவிக்கு.. மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே,தவிர சான்றிதழை அல்ல.. சாதி சான்றிதழை கிழிக்க சொல்வதின் பின்ணணியை பார்க்க வேண்டும் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்தின் அடித்தட்டிலிரு்து மேலே வர முடியாமல் சுழன்று திரியும் எம் மக்களை .. மிகவும் பிற்படுத்தபட்டவராய்.. சமூகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு கல்வி வேலைவாய்ப்பில் ..உயர்சாதியினரோடு போட்டியிட முடியவில்லை.. பொருளாதாரம்..கட்டமைப்பு வசதி அதற்கான வாய்ப்புகள் மறுக்கபட்டவர்களையும் .. உயர்கல்விகளுக்கு வருவதற்கு .. அவர்களுக்கான விகிதாசாரத்தை தருவது தானே சரி .. அவர்களை எப்படி இனங்காண்பது..
இன்றைக்கும் உயர்பதவிகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துகிற அவலம்.. உச்சநீதிபீடம் முதல் .கவர்னர்...அரசு அதிகாரிகள் ..செயலர்கள் என அதிகார அமைப்பையே பார்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.. இடைநிலை கடைநிலை பணிகள் தான் ..பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களுக்கு கிடைக்கிறது அதையும் ஒழித்துகட்ட சாதி சான்றிதழ் மறுப்பு பயன்படுமே தவிர...அவர்களை ஒருபோதும் தூக்கிவிடாது..
..
சாதியை ஒழிக்க வேண்டாமா என கேட்பவருக்கு .. முதலில் 3% விழுக்காடு பார்பானுக்கு அவன் விகிதாசாரப்படி 1.5 % விழுக்காடு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க சொல்லுங்கள்..
இடஒதுக்கீட்டின் படி முழுவதுமாக நிரப்பபடாமல் இருக்கிறது..
அப்படியே எம் குழந்தைகள் உயர்கல்வியை தகுதி இடஒதுக்கீட்டின்படி பெற்று வந்தால் அவர்களை கொலை செய்து தற்கொலையென கதைகட்டி.. அந்த இடத்தை அபகரிக்கும் செயல் ..
இந்தியாவில் இடஒதுக்கீடில்லாமல் உயர்பதவி அதிகாரங்களில் பார்பனர்கள் எப்படி இத்தனை பதவிகளில் என எப்போதாவது கேட்டதுண்டா.. சாதி சான்றிதழை ஒழித்தால் எல்லாவற்றையும் பொதுவாக்கினால் மொத்தமும்,கொள்ளை போகும்.. இப்போதே நீட்டென்ற பெயரில் மருத்துவத்தில் எம் குழந்தைகளின் உரிமைகள் பறிபோகிறது
இதெல்லாம் திடீர் அரசியல்வாதிக்கு புரியாது..
இந்த மண்ணின் மக்களை ..அவர்தம் உரிமைகளை தடுக்க நினைக்கும் செயல் இது..
***********************************
சிலைகள் கடத்தபடுவது குறித்து ஏதேனும் கருத்து சொல்லியிருக்கிறாரா... கதவை உடைத்தோ சுவரை உடைத்தோ சிலைகள் திருடபடவில்லை .. கருவறைக்குள் நுழையும் அதிகாரம் பெற்ற திருடர்கள்.. அதேபோல் பித்தளை சிலையை வைத்துவிட்டு ஐம்பொன்சிலையை கடத்துவதாகவும்.. தமிழக கோவில்களில் 7000 கோவில்களில் டூப்ளிகேட் சிலைகள் தான் உள்ளன என்கிறார்
பொன். மாணிக்கவேல்.. இதற்காகதான் அறநிலையத்துறையை நாங்களே நிர்வகிப்போமென எச்.ராசா சொல்லி வருகிறாரா.. சிலைதிருட்டில் பாஜக தேசிய பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு இருப்பதாகவும் ..அதனால் தான் பொன்.மாணிக்கவேல் அவசர அவசரமாக ரயில்வேதுறைக்கு மாற்றபட்டதாகவும் செய்திகள் வருகின்றன ..இது குறித்து திமுக போராட்டத்தை நடத்த வேண்டும்.. சட்டமன்றத்தில் முதல்வர் சொன்ன பதிலுரை திருப்தியாகவே இல்லை வழக்கம் போல நீதிமன்றத்தில் இருக்கிறது.. பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்கிறார்.. ஆம் அரசுக்கு ..ஒத்தூதவில்லை அவர்..சிலை திருட்டிற்கு காரணமாக உள்ள பாப்பான்களை காப்பாற்ற அரசு முயல்கிறது
திருசெந்தூர் முருகனின் வேல் காணமல் போனதற்காக .. நீதிகேட்டு நெடும்பயணம் நடத்திய வரலாறெல்லாம் உண்டு.. இந்த சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் டெல்லி வரை செல்வாக்கு பெற்றியிருப்பதாக சொல்லபடுகிறது..
எதற்காக நாங்களே நிர்வகிக்கிறோமென சொல்கிறார்கள் என்பதன் பொருள் இப்போது விளங்கும்.. சிலை திருடர்களை அடையாளம்காண வேண்டும்..
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாய் ஆககூடாது..

No comments: