Thursday, May 17, 2018

ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படும் பத்மநாபா

காந்தி, லிங்கன், இந்திரா வரிசையில் தோழர் பத்மநாபா.

தேச விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் கொலைகாரன் ஒருவனால் வழிபாட்டு ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சமய வேறுபாடுகள் நீங்கி சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்ற உயரிய கொள்கை அவரது உயிரை வாங்கியது.

நிறவெறி ஒழித்து அடிமை விலங்கொடித்து மனித சமுதாயத்தை உய்விக்கப் பாடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் திரையரங்கு ஒன்றில் நிறவெறிக் கொடியவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கும் சமய ஒற்றுமைக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் அரும்பாடுபட்ட அன்னை இந்திராகாந்தி அவர்கள் பட்டப்பகலில் பதைக்கப் பதைக்கச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தத் தலைவர்கள் இறந்தும் இறவாப் புகழ் எய்திவிட்டனர். சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பிடித்து விட்டனர். அவர்களுடைய பூதவுடல் மறைந்தாலும், அவர்களுடைய கொள்கைகள் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய கொள்கைகள் வெற்றிநடை போட்டு வருகின்றன.

அவர்களது வரிசையில் இடம்பெற்றுவிட்டார் அமரர் பத்மநாபா. வெறும் 39 வயதே நிரம்பிய பத்மநாபா புலிகளால்சுட்டுக்கொல்லப்பட்டார். அவரோடு அவரது ஏனைய தோழர்கள் 12பேர் படுகொலைக்கு ஆளானார்கள். ஈழ மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மண்ணில் பிணமானார்கள்.காட்டி கொடுத்து ,தேநீர் குடித்து விட்டு சுட்டுத்தள்ளுவது என்பது புலிக்கொள்கை, எமது ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படும் பத்மநாபாவையும் அப்படிதான் புலிகள் சுட்டுகொன்றார்கள் .

பிரபாகரனும் ,தலைவர் பத்மநாபாவும் இப்போது 
உயிருடன் இருந்திருந்தால் 
வட கிழக்கில் ஒரு ஜனநாயக தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தலைவர் பத்மநாபா அவர்களுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருந்தது என்பதை சர்வதேசம் பார்த்திருக்கும்,
இந்த பத்மநாபா என்ற தலைவனை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள முன்னாள் புலிகளே ஆதரிதிருப்பர்கள், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லும் ஒரு சில புலிகள் பத்மநாபாவை ஆதரிக்க மாட்டார்கள், ஏனெனில் பிரபாகரன் வந்தால் முதல் வெடி இவர்களுக்கு தான் என்ற பயம்.

புலிகளை ஆதரிப்பவர்கள், ஒன்று கைகூலி அல்லது பயந்தாங்கொள்ளி அல்லது விவரம் தெரியாத பதர்கள், இம்மூன்று அன்றி எதுவும் சாத்தியமில்லை.அவர்களை மனிதர்கள் என்றே உலகம் ஒப்புகொள்ளாதபோது, போராளிகள் என்று எப்படி சொல்லமுடியும்? நிச்சயம் தமிழ் நாகரீகம் அறிந்த யாரும் அவர்களை ஆதரிக்கமாட்டார்கள்,

இந்திய துணையின்றி ஈழத்தில் விடுதலை கிடையாது என்று கூறியதற்காக பத்மநாபாவை மண்ணுக்கு அனுப்பிய பிரபாகரன் அதே இந்திய துணையில்லாமையால் இறுதியில் சிங்களர்களால் மண்ணுக்கு அனுப்பப்பட்டார் 
என்பது தான் வரலாறு.வரலாறு அவருக்கு சந்தர்ப்பம் தராவிட்டாலும், வரலாறு அவரது தூரநோக்கு சரி என நிரூபித்து வருகிறது.

அடக்குமுறையும்,அகங்காரமும் கொண்ட ஒரு குழு,ஒரு இனத்தையே வேரோடு அழித்து ,தாங்களும் அழிந்து போனார்கள் ,இதற்கு அவர்கள் செய்த தூரோகங்களே காரணம், புலிகளே உண்மையான துரோகிகள் ,ஆனால் அடுத்தவர்களுக்கு துரோகி பட்டம் 
கொடுப்பதில் புலிகள் வல்லவர்கள் .

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அவரது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்தாலும் தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் வளர்வதையும், அதற்குத் தீனி போட்டு வளர்க்கும் தலைவர்களையும் அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

இந்தியாவின் ஒத்துழைப்போடுதான் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

பத்பநாபா தான் பிறந்து வளர்ந்த நாட்டை நேசித்தது போலவே இந்தியாவையும் நேசித்த ஒருவர். இந்தியா, ஈழத்து மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேசக் கரம் நீட்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.

நாபா இந்தியாவில் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் அவர் சந்திக்காத பிரமுகர்களோ மக்கள் அணியினரோ இல்லை என்றே சொல்லலாம். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து இரங்கற் செய்தி வெளியிடாத மக்கள் இயக்கங்களே இல்லை எனலாம்.

மலையக மக்கள் , முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட ஒருவர், ஈழவிடுதலை இயக்கங்கள் மத்தியில் இருந்தார் என்றால் அது பத்மநாபா ஒருவராகவே இருக்கும். மரணித்த தியாகிகளின் குடும்பங்களைச் சென்று சந்தித்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டறிந்து, முடிந்தவரை அவற்றை எல்லாம் தீர்த்து வைக்கும் கடமையை எப்போதும் முதன்மையானதாய் கருதி செயலாற்றினார். பத்பநாபா மக்களை நேசித்த மகத்தான மனிதர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கை, அரசியல் நிலைப்பாடு பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்று அறிந்துக்கொள்ள பிறர் கூறும் அரசியல் கருத்துக்கள் பற்றி உன்னிப்பாகவும், அடக்கமாகவும் கேட்டு கிரகித்துக் கொள்ளும் தன்மை உடையவர் பத்மநாபா.

அவரது மரணம் விடுதலை இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். மறைந்த பத்மநாபா தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நீங்காத இடம் பெற்று என்றென்றைக்கும் நிலைத்து நிற்பார் என்பதில் ஐயமில்லை. வாழ்க அமரர் பத்மநாபா புகழ்.

இறுதியாக முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள் ,பத்மநாபா பற்றி கூறிய ஒருசில தகவல்கள் இதோ உங்களுக்காக.

தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் உள்ளத்தில் உண்மையும் வாக்கில் ஒளியும் அவரிடம் நிறைந்து காணப்பட்டன. அழுக்காறு, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் அறவேயற்ற அறவாழ்க்கையை அவர் இயல்பாகவே கொண்டிருந்தார். நிதானம், பொறுமை. கடுமையான உழைப்பு. தன்னலமின்மை. கடும்சொல் பேசாமை. மனிதாபிமானம் என்பன இயற்கையிவேயே அவரோடு கூடிப்பிறந்திருந்தன.

அவர் கொள்கைப் பிடிவாதமுடைய ஒரு சமதர்மப் புரட்சிவாதி. மார்க்சிசம், வர்க்கம், புரட்சி, போராட்டம் என்ற வார்த்தைப் பிரயோகங்களை உருப்போடும் வரட்டுத்தனமோ அல்லது தனது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக புரட்சிக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் பாசாங்குத்தனமோ அவரது புரட்சி வாழ்க்கையில் எள்ளளவும் இருந்ததில்லை.

அவர் சமூகப் புரட்சிக்காக உணர்வுபூர்வமாக உழைத்தார்: சமூக புரட்சியாளர்களை உள்ளத்தால் நேசித்தார். நேர்மையான சமூகப் புரட்சியாளர்கள் மீது - அவர்கள் தன்னை விமர்சிப்பவர்களாயினும் சரி எதிர்ப்பவர்களாயினும் சரி அவர்கள்மீது உளமார அன்பு செலுத்தினார். அவ்வாறானவர்களோடு பழகுவதிலும் நட்புக்கொள்வதிலும் பெருமிதமும் மகிழ்சியும் கொண்டார்.

தோழர் நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பனவற்றை இம்மியளவேனும் யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் , அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதை - பதவி வெறி பிடித்து செயற்பட்டதில்லை - தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை. ஸ்தாபனத்தின் ஜனநாயகப்பூர்வமான பொது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கட்டுப்பாடான உறுப்பினனுக்கு முன்னுதாரணமாக அவரே திகழ்ந்தார்.

எந்தத் தோழருடனும் அன்பாகப் பழகுவார். அவர்களின் குற்றங்கள் குறைகளைத் தானே நேரில் கேட்டறிந்து கொள்வார். ஸ்தாபனத்தின் உறுப்பினர்களோடு வரையறை வைத்துப் பழகுவது தனது தலைமைக்கு அவசியம் என்று அவர் எந்தக் கட்டத்திலும் நடந்து கொண்டதுமில்லை: அவ்வாறான கருத்தைக் கொண்டிருக்கவுமில்லை. எந்தத் தோழரும் அவரைச் சந்திக்கலாம் பேசலாம் என்ற நிலையையே அவர் கடைப்பிடித்து வந்தார்.

அதேபோல் ஸ்தாபனத்தின் நண்பர்களாயினும் சரி, மாற்று அணிகளின் எந்த மட்ட உறுப்பினர்களாயினும் சரி, பத்திரிகையாளர்களாயினும் சரி, வேறு வெளியார்களாயினும் சரி அவரைச் சந்திப்பதில் எந்தக் கடினத்தையும் அவர் வைத்திருக்கவில்லை. பத்pரிகையாளர்கள் அவரை எந்த நேரமும் சந்திக்கக் கூடிய ஒருவர் என்றே பல தடவைகள் குறிப்பிட்டுள்ளனர்.

தோழர் நாபா அவர்கள் எப்போதும் அமைதியாகப் பேசும் சுபாவம் கொண்டவர். கத்திப் பேசித்தான் தனது கருத்தை மற்றவர்கள் மத்தியில் பதியவைக்க முடியம் என்ற கருத்து அவரது பேச்சுநடைமுறையில் இருக்கவில்லை. அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாரோ அந்த நபருக்கு மட்டுமே கேட்கக்கூடிய வகையிலேயே பேசுவார். மற்றவர்களோடு நேரடியாகப் பேசும்போது மட்டுமல்ல தொலைபேசியிலும் பேசும் திறன் அவருக்கிருந்தது. சலசலப்பற்ற அவரது செயற்திறன் போலவே அவரது சத்தமற்ற பேச்சுத்திறனும் அமைந்திருந்தது.

* இன்று சகோதர யுத்தத்தை நடத்துவோரை நீங்கள் தேடி அழிக்க வேண்டியதில்லை அவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள். 
பத்மநாபா 1987

* நாம் மரணத்தை கண்டு அஞ்சவில்லை ஒரு அடிமையாய் அனாதையாய் 
தெருக்களில் மரணித்துப் போவதைத்தான் வெறுக்கிறோம்.
பத்மநாபா 1987.

என்ன அதிசயம் அவர் கூறிய
அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.

நாபாவை கொன்ற புலிகளுடன் சேர்ந்து பெரும் துரோகத்தை செய்து விட்டு , தற்போது 
இந்த மாபெரும் தலைவனை வைத்து தனது அரசியல் பிழைப்பை நடாத்த தொடங்கியுள்ளார் சுரேஷ் பிரேமச்சந்திரன், இவர் இனிவரும் காலங்களில் இருக்கும் இடமே தெரியாமல் போகலாம்.

No comments: