Saturday, May 19, 2018

பத்மநாபா நினைவுக் கூட்டத்தில் ஜெயகாந்தன்


ஜெயகாந்தன் சொன்னவைகள் அனைத்தும் உண்மை தான்! புலிகள்தான் தமிழினத்தின் துரோகிகள், புலிகள் பத்பநாபாவையும் மற்றும் அவரின் இயக்க அங்கத்தவர்களை மட்டும் கொலை செய்யவில்லை அவர்கள் tello , thampa, tella, plot, epdp அமைப்புகளில் இருந்த ஆயிரக்கணக்கான இயக்க உறுப்பினர்களை கொன்று குவித்தவர்கள். இவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை ஈழத் தமிழர்கள் ஆகிய பொது மக்களையும் பல்லாயிரக்கணக்கானவர்களையும் கொன்று குவித்தவர். இவைகள் அனைத்தையும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அறிய வாய்ப்பில்லை ஏனென்றால் அனைத்தும் மறைக்கப் பட்டுவிட்டது. பொதுவாக புலிகள் கொடிய செயல்கள்தான் செய்தவர்கள். ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்தவர்கள். இலங்கையில் வடக்கும் கிழக்கும் இணைந்து தனியாட்சியாக செயற்படக் கூடிய வாய்பிருந்தது ஆனால் புலிகள் அவற்றை எல்லாம் நிராகரித்து தமிழ் மக்கள் பெற வேண்டிய நன்மைகள் அனைத்தையும் தவறவிட்டு விட்டு தமிழ் மக்களை ஏமாற்றியே யுத்தம் செய்து வந்தவர்கள். யுத்தத்தினால் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் அதாவது பொது மக்கள் மட்டும் இறந்ததுதான் மிச்சம்.

ஐம்பது சதவீதமான ஈழத் தமிழர்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. இறுதிக் காலத்தில் பேச்சு வார்த்தை என்ற பெயரில் மேசைக்கு போனார்கள் புலிகள் அப்பொழுதிலிருந்ததான் ஐம்பது சதவீதமான ஈழத் தமிழர்கள் ஆதரிக்க முன் வந்தார்கள். ஒருமித்த ஈழத் தமிழர்கள் போரை விரும்பவில்லை. போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்றே விரும்பினார்கள். ஏனென்றால் ஈழத் தமிழர்களில் இளஞ் சந்ததியினர் போருக்காக உயிரை மாய்த்துக் கொண்ட வண்ணமே இருந்து வந்தார்கள். ஏனென்றால் புலிகள் இயக்கம் காலகாலமாக அவர்களை பயன் படுத்திய வண்ணமே இருந்து வந்தார்கள். நான் இதில் இறுதியாக நடந்த யுத்தத்தைப் பற்றி பேசவில்லை. அதற்கு முன்னால் கொடிய வரலாறுகள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துதான் சிறந்தது ஏனென்றால் இலங்கைத் தமிழ் மக்கள் முந்தய காலங்களைவிட நிம்மதியாக உள்ளார்கள்.

No comments: