Saturday, May 19, 2018

இனப்படுகொலை என்றால்

இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது
ஹிட்லர் அதனை செய்தான் அதன் பின் கொஞ்ச வருடம் முன்பு யூகேஸ்லேவியாவில் நடந்தது, ஆப்ரிக்காவில் அடிக்கடி நடக்கும்
முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்தது இனபடுகொலை ஆகாது, யாழ்பாணத்தில் தமிழர் இயல்பு வாழ்க்கை வாழ்ந்தனர், மட்டகிளப்பு அமைதியாக இருந்தது
கொழும்பு தமிழர் மீது ஒரு குண்டூசி கூட விழவில்லை
சிக்கல் புலிகள் பிடித்து வைத்த முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் மூலமாக வந்தது, அவர்களை கிளிநொச்சியில் இருந்தே மிரட்டி கூட கூட்டிகொண்டு கிழக்கு நோக்கி புலிகள் நடத்தினார்கள்
புலிகள் இத்தனை ஆயிரம் மக்களை விடுத்திருந்தால் இக்கொடும் சாவு நடந்திருக்காது, பின் அதுதான் நடந்தது
இதற்கு காரணம் காங்கிரஸ் தோற்கும் வாஜ்பாய் 2009ல் பிரதமராவார் அவர் வைகோவின் பேச்சை கேட்டு ஈழத்தில் தலையிட்டு போரை நிறுத்துவார் எனும் தவறான வழிகாட்டல்
இதனால்தான் அத்தனை ஆயிரம் மக்களை பிடித்து வைத்து புலிகள் காவல் இருந்தனர், சிங்களமோ ஆயிரம் பேர் கொல்லபட்டாலும் புலிகளை விட கூடாது எனும் வெறியில் இருந்தது
இதுதான் சில ஆயிரம் மக்கள் இறக்க காரணம்
அதனால்தான் இக்கொடூர சாவு இனபடுகொலை வகைக்குள் வராது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என முடிந்துவிட்டது
சும்மா இனபடுகொலை என சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான், அவனை திருத்த முடியாது

No comments: