Thursday, May 17, 2018

பிரபாகரனால் கொல்லபட்ட தமிழர்களின் பட்டியலை பாருங்கள்

ஆங்காங்கே கலைஞரையும், இந்தியாவினையும் திட்டிகொண்டிருக்கும் சைமனின் தும்பிகளுக்காகவும், குபீர் தமிழுண்ர்வு போராளிகளுக்காகவும், இந்தியா ஈழதமிழரை கொன்றது என சொல்பவர்களுக்காகவும் சொல்லிகொள்வது..
கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தாராம், ஆனால் உங்கள் மண்டைகளில் ஏன் அந்த மண் அப்படியே இருக்கின்றது என தெரியவில்லை,
ஏதோ ஈழத்தில் சண்டை 2006ல்தான் வந்தது போலவும், பிரபாகரன் பெரும் உத்தமன் என்பது போலவும், 2009ல் இந்தியா அவனை கொல்ல முன்னின்றது என்பது போலவும் எத்தனை பொய்கள்? எத்தனை புரட்டுகள்
சரி, என்னை திட்டுமுன் பிரபாகரனால் கொல்லபட்ட தமிழர்களின் பட்டியலை பாருங்கள்
ஆல்பர்ட் துரையப்பா, மைக்கேல்,பற்குணம் என 1980களின் பட்டியல்
செட்டிதனபாலசிங்கம் எனும் கொள்ளையனோடு சேர்ந்து அடகு கடை, வங்கி கொள்ளையில் நடந்த கொலைகள் என 1981 வரிசைகள்
செல்லகிளி மர்மமாக செத்தது, தமிழ் போலீஸ் அதிகாரி பஸ்தியாம் பிள்ளை கொலை என 1982 வரிசைகள்
உச்சமாக குட்டிமணியினை காட்டிகொடுத்த யூதாஸ் என்று உங்கள் மேதகு மேல் பெரும் கறை உண்டு,
அதன்பின் ஆள் அம்பு சேனை வாய்த்தவுடன் செய்த கொலைகள் ஏராளம்.
கொஞ்சம் யோசனை சொன்ன அல்லது கண்டித்த பெண் சிந்தனையாளர்களான ராஜினி, செல்வி, மகேஸ்வரி, ரேலங்கி என பெரும் எழுத்தாளர்களை கொன்றது யார்?
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், லட்சுமண் கதிர்காமர் என கொன்றது யார்?
சக போராளியான சபாரத்தினத்தை 2000 போராளிகளோடு சேர்த்து கொன்றது யா? 2000 பேர் அய்யா? தமிழ் போராளிகள்.
பத்மநாபாவினை சென்னையில் 17பேரோடு கொன்றது யார்? அவரின் இயக்கத்தார் 1000 பேரை கொளுத்தியது யார்?
கந்தன் கருணை எனும் இல்லத்தில் 80 போராளிகளை கொன்றது யார்?
செய்யதெரியாமல் வெடிகுண்டு செய்து 100 பொதுமக்களை கொன்று அச்செய்தியினை 2 பேர் என மாற்றியது யார்?
காத்தான்குடி பள்ளிவாசலில் புகுந்து 100 இஸ்லாமியரை கொன்று மசூதியினை ரத்தகுளம் ஆக்கியது யார்? தங்கத்தையும் பணத்தையும் பறித்துகொண்டு 5000 இஸ்லாமிய குடும்பங்களை விரட்டியது யார்?
மாத்தையா எனும் புலியோடு 800 புலிகளை கொடூரமாக கொன்றது யார்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?
அதன் பின் கருணாவோடு சென்ற புலிகள் 300க்கும் மேற்பட்டோரை கதற கதற கொன்றது யார்?
சரி இவர்களாவது தமிழர்கள் என்றாலும் ஈழத்தவர், இப்படி பிரபாகரனால் கொல்லபட்ட 15 ஆயிரம் தமிழர்களையாவது உங்கள் கணக்குபடி துரோகிகள் என விட்டுவிடலாம்.
ஆனால் சிங்களனோடு சேர்ந்து புலிகள் 1500 அமைதிபடை வீரர்களை கொன்றதை, ராஜிவோடு சேர்ந்து 16 தமிழரை கொன்றதை, பத்மநாபா கொலையில் 4 தமிழக போலீசாரை கொன்றதை மறந்தால் நீ இந்தியனா? அப்படி இனம்தான் முக்கியம் நாடு இல்லை என்றால் கிளம்பு கிளிநொச்சிக்கு உனக்கு இங்கு என்ன வேலை?
இன்று 3 இந்திய தமிழரும், 4 ஈழத்தவரும் தூக்கு கயிறு முன் நிற்க, அவர்களை காப்பாற்ற அந்த பிரபாகரன் ஏதும் வாய் திறந்து சொன்னனா? சொல். அவன் சொல்லியிருந்தால், அந்த வெடிகுண்டு எங்களால் செய்யபட்டது என அவன் சொன்னால் பேரரிவாளன் வாழ்க்கை தொலைத்திருப்பானா?
இந்தியா என்ன செய்யவில்லை?
1983 முதல் 1990 வரை அது எத்தனை முறை காப்பாற்றி என்னவெல்லாம் செய்தது? அதனை ஏன் மறைக்கின்றீர்கள்?
மக்களை மிரட்டி கப்பம் வாங்கிய ஒரு ரவுடி கும்பல், அந்நிய சக்திகளிடம் விழுந்த்து மனம் போன போக்கில் கொலை செய்தால் அது போராட்டமா?
இன்று படுகொலை என பிணங்கள் என முள்ளிவாய்க்கால் படம்போடும் நீங்கள்? நாங்கள் பதிலுக்கு போட்டால் தாங்க முடியுமா? அது முழுவதும் போட்டால் முகநூல் தாங்குமா?
நீ முள்ளிவாய்க்கால் படம் போட்டுகொண்டே இரு, நாங்கள் புலிகளின் அட்டகாசத்திற்கு சில சாம்பிள் மட்டும் போடுகின்றோம்.
நீ பாலசந்திரனை பார்த்து அழுதால், நாங்கள் ராஜிவோடு செத்த அந்த சிறுமிக்காக அழுவோம்.
நீ அடுத்தநாட்டு மக்களுக்காக அழு, நாங்கள் சொந்த மக்களுக்காக அழுகின்றோம், அப்படி இந்நாடு முக்கியமல்ல அந்த நாடு முக்கியமென்றால் கிளம்பி செல், உங்கள் சீமானையும் அழைத்துகொண்டு போ.
சிங்களனோடு மோதி சாவு, இங்கிருந்துகொண்டு எமது ராணுவத்தையும், எமது மக்களையும் நினைக்காமல் அடுத்த நாட்டை நினைப்பவன் தேசதுரோகி, உங்களுக்கு இங்கு என்ன வேலை?
அமைதிபடை காலத்திலும் சென்று ராஜிவ் கொலையில் சந்தேகம் இருந்தும் குற்றம் சாட்டபடாமல் தப்பிய வைகோ, நெடுமாறன் போன்றவர்களையும், பின் சென்று பிரபாகரனை பார்த்த தமிழக சினிமாகாரர்களையும் அன்றே தேசதுரோக குற்றச்சாட்டில் போட்டு சாத்தி இருக்கவேண்டும்,
அப்படி செய்திருந்தால் நீங்கள் எல்லாம் பேச முடியும்?
அதனை இந்த தேசம் உங்களுக்கு செய்யவில்லை, அந்த தைரியத்தில்தானே பேசிகொண்டிருக்கின்றீர்கள்?
யாழ்பாண மக்களுக்கு 1995ல் விடுதலை கிடைத்தது, அதன் பின் புலிகள் அதனை பிடிக்கவே முடியவில்லை. அவர்கள் மாவீரம் மண்ணாங்கட்டி எல்லாம் அவ்வளவுதான்,
சும்மா சவுடால், அவர்களின் ஒரே தந்திரம் எதிர்பாரா நேரம் தாக்குவது அல்லது நம்பவைத்து கொல்வது.
பெரும் படை, அணி, வீரம் எல்லாம் தமிழக தினதந்தி மட்டும் கண்டது.
அப்படி வன்னி மக்களுக்கு விடுதலை கிடைத்த நாள் மே 18, அதுதான் உண்மை
(புலிகளால் கொல்லபட்ட வரிசை மிக பெரிது, இது ஒரு துளிதான்)

Amirthalingam

Neelam Thiruchelvam

Rajiv Gandhi

IPKF

EPRLF Padmanabha

Lakshman Kadirgamar


1. Amirthalingam - http://www.asiantribune.com/node/63128 - “It was the Tigers who killed my husband,” – Mangayarkarasi Amirthalingham

2. Neelam Thiruchelvam - https://www.colombotelegraph.com/index.php/defacing-of-sanctity-of-life-mural-on-kynsey-terrace/dr-neelan-tiruchelvam/

3. Lakshman Kadirgamar - https://www.smh.com.au/news/world/state-of-emergency-declared-after-assassination/2005/08/13/1123353543133.html

4. Previous Post  புலிகளால் கொல்லபட்ட தமிழர்கள்

No comments: