Thursday, May 17, 2018

ஈழ வியாபாரம்

ஈழ வியாபாரம்
’’ஈழம், இந்த முழக்கம் ஒரு உரிமைப் போரையே நடத்தியது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஈகை செய்தது என்று மட்டுமே நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
ஆனால் தமிழகத்தில் இந்த முழக்கம் ஒரு மிகப்பெரிய வியாபாரம் என்று நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை
சமூக பொருளாதார அரசியல் நீதி ஆகியவற்றின் நுண்ணறிவு இல்லாத ஆனால் தமிழ் அபிமானம் கொண்ட மற்றும் மாற்றத்தை வேண்டும் இளைஞர்களை இந்த ஈழ முழக்கம் அணி திரளச்செய்கிறது, போராட்ட களத்தை நோக்கி சுண்டி இழுக்கிறது என்பதே நிதர்சனம்
தமிழகம் ஒரு தனி நாடாகும் அடிப்படை உள்கட்டமைப்பைக்கூட கொண்டிராத நிலையில், தமிழ் தேசியம் சாத்தியமேயில்லை என்ற உண்மையை அறிந்திருந்தும், ஈழ முழக்கம் தமிழக இளைஞர்கள் மத்தியில் தமிழ்தேசியம் காணும் எதிர்பார்ப்பு வரை இட்டுச் சென்றிருக்கிறது என்பதுவரை நாம் அறிந்திருக்கிறோம்.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, ஈழம் எனும் முழக்கம் கோடிகளை கொட்டிக்கொடுக்கும் மிகப்பெரிய வணிகம் என்பதை எளிய மக்களாகிய நாம் அறியவில்லை, ஆனால் நம்மை தூண்டும் தமிழ்தேசிய வியாதிகள் நன்கு அறிந்தேயிருக்கின்றனர்.
இலங்கை மற்றும் இந்தியா தாண்டி வாழும் பெரும்பாலான வெளிநாட்டுவாழ் தமிழர்கள், ஈழம் தொடர்பான அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தேவையான பணத்தை நன்கொடையாக அளிக்கின்றனர். இதில் ஒருசில பகுதிகளையே செலவு செய்துவிட்டு மீதமுள்ள பணத்தை ஆட்டயப்போட்டு பங்கு பிரித்துக் கொள்கின்றனர் நமது தமிழ்தேசிய வியாதிகள்.
உற்று கவணித்துப்பாருங்கள், இந்த தமிழ்தேசிய வியாதிகள் ஈழத்திற்காக பல போராட்டங்களை நடத்துவார்கள், ஆனால் அகதிகள் முகாம்களில் வாழும் ஏதிலிகளுக்கு ஆக்கப்பூர்வமான எந்த உதவியையும் செய்திருக்க மாட்டார்கள். காரணம் உதவி செய்வது தமிழ்தேசிய வியாதிகளின் வேலையல்ல. கோடிகளை வாரிக்குவிக்கும் ஈழம் மற்றும் தமிழ்தேசியத்திற்கான போராட்டங்களை நடத்துவது மட்டுமே முக்கியம்
தமிழகத்தில், ஈழம் என்பது வருமானம் ஈட்டும் வியாபாரச் சந்தையே
மே மாதம் ஆனாலே ஈழ வியாபரம் கொடி கட்டிப் பறக்கும்

ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சகல ஈழத்தமிழ் அரசியல் சக்திகளையும் தொடர்ந்து சந்தித்து உரிய முன்னெடுப்பை எடுத்தது முழுக்க் முழுக்க திமுகவும் அதை சார்ந்த திராவிடர் அமைப்புக்களும்தான் .. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுகவும் எம்ஜியாரும் அத்தனை அழிவுக்கும் வழி சமைத்தனர் ஈழ போராட்டத்தின் இடையில் புகுந்த எம்ஜியார் பிரபாகரனை மட்டும் தனித்து தூக்கி பிடித்து கொம்பு சீவி விட்டு , பிரபாகரன் அத்தனை சகோதர படுகொலைகளையும் அரங்கேற்றி கொண்டிருந்த பொழுது அவற்றை எல்லாம் ஏதோவொரு வீர் தீர செயல்களாக ரசித்த எம்ஜியார் மேலும் மேலும் பிரபாகரனுக்கு அந்த போதையை ஏற்றி ஏற்றி திருத்தவே முடியாத தவறுக்கு வழி சமைத்தார் .. அண்மையில் இடம்பெற்ற அத்தனை அவலங்களுக்கும் எம்ஜியாரின் பங்களிப்பு அளவற்றது . எம்ஜியார் இன்று இருந்திருந்தால் ஐ நா மனித உரிமை ஆணையும் முன்னால் நிறுத்த பட்டிருப்பார்


No comments: