Thursday, May 17, 2018

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் இரண்டாவது தவணையாக சுப உதயகுமாரன் தலைமையில்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் இரண்டாவது தவணையாக சுப உதயகுமாரன் தலைமையில் புதுவேகம் எடுத்தநாட்கள். ஊடகங்கள் அவரை மகாத்மாவாக கொண்டாடிய துவக்க காலம். தலைமைச்செயலகத்தில் அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபின் ஒரு பேட்டி கொடுத்தார். “அம்மாவை சந்தித்தோம்” என்று ஆரம்பித்தார். அந்த நொடியே அவர்மீதான அத்தனை மரியாதையும் போனது. மற்ற பல போராளிகளைப்போல இதுவும் ஒரு போலி என்று அடையாளம் காட்டிய சொல் அவர் உதிர்த்த “அம்மா” என்கிற அந்த ஒற்றைச்சொல். முதல்வர் ஜெயலலிதாவை இவர் பெயர்குறிப்பிட்டுச் அழைக்கச் சொல்லவில்லை. மாண்புமிகு முதல்வரை சந்தித்தோம் என்று மரியாதையாக சொல்வதே முறையான, நாகரீகமான வழியாக இருந்திருக்கும். மாறாக அவர் “அம்மா” என்றார். எம்ஜிஆரை “புரட்சித்தலைவர்” என்ற கம்யூனிஸ்ட் தலைவர்களைப்போல அன்றே இவரது சாயம் என்னளவில் வெளுத்தது. அது உலகுக்கு வெளுக்க இத்தனை ஆண்டுகள் பிடித்தன.
பிகு: உண்மையில் கூடங்குளத்தை ஆரம்பத்தில் எதிர்த்த குழுவினர் பலர் இவர் தலைமையிலான இரண்டாம் தவணை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது பலரும் கவனிக்க மறந்த செய்தி.

No comments: