Thursday, May 17, 2018

ஒரு மாநில முதல்வரால் போரையே நிறுத்தியிருக்க முடியும் என நம்புவது அறியாமையின் உச்சம்

ஈழத்தமிழனுக்கும் சிங்களவனுக்கும் சண்டை,இதில் வலு உள்ளவன் பல நாட்டு உதவியுடன் வெற்றி பெற்றான்.இதில் அன்றைய மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரே காரணத்திற்காக ஒரு மாநில முதல்வரால் போரையே நிறுத்தியிருக்க முடியும் என நம்புவது அறியாமையின் உச்சம்.அப்படி இருந்தும் கலைஞர் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தார் ஆனால் போரின் உச்சத்தில் ஸ்ரீலங்கா இந்தியாவின் பேச்சையே கேட்கவில்லை என எஸ்.எம்.கிருஷ்ணாவே சொல்லியிருக்கிறார்.

உண்மை இப்படி இருக்க இன்னும் தி மு க துரோகம் என்பவன் தி மு க மேல் கொண்ட காழ்ப்புணர்வு மட்டுமே காரணம் ஈழத்தமிழர் மேல் பாசமெல்லாம் இல்லை. இது ஒரு சாக்கு அவ்வளவே.சொல்லப்போனால் விடுதலைப்புலிகளால் ராஜிவ் கொல்லப்பட்ட போதும் சரி,அதற்கு முன்பு அவர்களுக்கு உதவுதாக கூறி ஆட்சியை இழந்த கட்சி
தி மு க மட்டுமே.மேலும் Ipkf இந்தியா திரும்பி வந்தபோது மரபை மீறி அதை வரவேற்க மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர்.

உண்மை என்னவெனில் பிரபாகரனும்,கோத்தபயவும்,
பசிலும் தன் லட்சியத்தை அடைய யாரையும் பலி கொடுக்க தயாராக இருந்தனர்.அதில் ஆர்மி வென்றது.இத்தனை நாள் பிரபாகரன் என்ற ஒற்றை மனிதருக்காக அவதூறுகளை பொறுத்தோம்,இனியும் அவர் பேரில் திமுகவை எதிர்த்தால் அதற்கும் தக்க பதிலடி கொடுப்போம்.





No comments: