Sunday, May 20, 2018

நீதி எங்கே கிடைக்கும்.? பத்தோடு பதினொன்றான துன்பியல்தான்

Rajh Selvapathi:


வங்காலையினூடாக செல்ல நேர்ந்த போது 2006 ல் இப்பகுதியில் ந்டந்த ஒரு கோர சம்பவம் ஞாபகத்துக்கு வந்து சென்றது. முள்ளிவாய்க்கால் முடிவு என்றால் அதன் தொடக்கம் இந்த வங்காலை சம்பவம்தான்.

ஜூன் 09,2006 நாள் மன்னார் வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ள தோமஸ்புரி கிராமத்தில் தந்தை, தாய், மகன், மகள் என நால்வர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தனர். இளம் தாய் தந்தையர். இதில் தந்தையும், மகனும் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.

2002 சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் இந்தியாவிலிருந்து திரும்பி தமது ஊரில் வாழ்ந்து வந்த சின்னையா மூர்த்தி மார்ட்டீன்(35) அவரது மனைவி சித்ரா என் அழைக்கப்பட்ட அந்தோனி மேரி மெட்டலின் (27), மகள் ஆன் லக்சிதா(09), மகன் நிலக்ஷன் அன்பியா(07) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட துரதிஸ்டசாலிகளாவர். மறுநாள் காலை ஏழு மணியாகியும் வீட்டிலிருந்த எவரும் வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்த கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சகோதரி இவர்களது வீட்டுக்குச் சென்று முன் கதவைத் திறந்து பார்த்து அலறிதுடித்திருந்தார் வீட்டின் வரவேற்பறையில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் மேரி மெட்டலின் (சித்திரா 27 வயது) இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்பகுதியெங்கும் இரத்தம் உறைந்து போய்க் கிடந்தது. இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஏனையோர் அங்கு திரண்டு வந்து பார்த்தபோது, இறந்து கிடந்த பெண்ணின் உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன் கூரான உளிகளால் குத்தி இவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேரி கொலை செய்யப்படும் முன் காட்டுமிராண்டிதனமாக பலியல் வன்புணர்வு செய்ய்ப்பட்டிருந்தார் அத்துடன், இவர் கொலை செய்யப்பட முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுமிருந்தன. இவரது கணவரையும் இரு பிள்ளைகளையும் அங்கு தேடியபோது, அருகிலுள்ள அறையொன்றினுள் மூவரதும் சடலங்கள் சுருக்குக் கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்தன. அறையின் தரையில் பெருமளவு இரத்தம் உறைந்து போயிருந்தது.

இப் பகுதியில் சில மாதங்களாகவே இடம்பெற்று வந்த அச்சமூட்டும் சம்பவங்களால், தோமஸ்புரி கிராம மக்களில் மிகப்பெரும்பாலானோர் இரவு நேரங்களில் வங்காலை புனித ஆனாள், தேவாலயத்திற்குச் சென்று தங்கிவிட்டு அதிகாலையில் வீடு திரும்புவர். எனினும் படுகொலை நடந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் இவர்களது உறவினர்களான நான்கு குடும்பங்களும் வேறு ஒரு சில குடும்பங்களும் இரவு நேரத்தில் இடம்பெயராது தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தனர். இந்த நிலையில், தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் (35) என்பவரது வீட்டினுள் நுழைந்தவர்கள் இந்தக் கொடூரப் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து விட்டுச் சென்றிருந்தனர்.

இந்த அப்பாவி பொதுமக்களை யார் படுகொலை செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பது இன்றுவரை மறைக்கப்பட்ட விடயமாகவே உள்ளது. இவர்களுக்கு நீதி வேண்டாமா? இது இன அழிப்பு இல்லையா? இன்னும் சில நாட்களில் இந்த குடும்பம் சிதைக்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. குறைந்தது ஒரு மெழுகு திரியையேனும் ஏற்றி வைப்பார்களா?

யாழ் பலகலைகழக வவுனியா வளாக guys கவனதுக்கு. வங்காலை உங்கள் இடத்தில் இருந்து கைக்கெட்டிய தூரத்தில்தான் உள்ளது.



Ponniya Rasalingam: இந்த படுகொலை தமிழ்
தேசியவாத. காட்டு. மராண்டி அரசியல் வாதிகளுக்கு புரிவதில்லை

Rajh Selvapathi: ஒருவேலை படுகொலையாளிகள் அவர்களின் இயக்குனநகளாக இருக்கலாம் அல்லவா?

Charles J Forman: கோரமான இப்படங்களைப் பொதுத் தளத்தில் போடுவதன் மூலம் இதே கொலைகள் மீண்டும் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படங்கள் யாரால் எடுக்கப்பட்டு, பொதுப் பாவிப்புக்கு அனுப்பப்பட்டது?

Rajh Selvapathi: இந்த சம்மவத்துடன் தொடர்புடைய இதைவிட மிக மோசமான படங்கள் அப்போது பொதுவெளியில் பிரச்சாரத்துக்காக விடப்பட்டது. இப்போதும் கூகுலில் உள்ளது.

Ganeshalingam Kanapathipillai: இது புலிகள் செய்ததாக்வே முன்னர் அறிந்தேன்.

Ganeshalingam Kanapathipillai: புலிகள் எப்போதும் பிரச்சாரங்களுக்காகவும் அப்பாவிகளைக் கொலைசெய்ததை நானறிவேன்.இதேபோல இன்ன்மொரு சம்பவமும் நடந்தேறியிருந்தது. ஒர் 6 வயதுக்குழந்தையை தூக்கில் போட்டுவிட்டு குழந்தையின் குறியில் காயங்களை ஏற்படுத்தி இராணுவம் செய்த்தாகப் பிரச்சாரம் செய்தனர்.



Thevi Tharma-Bala: இராணுவம் என அன்று ஆணித்தரமாக தேவாலய போதகர் குறிப்பிட்டிருந்தார்.

Rahu Rahu Kathiravelu:

தமிழ் மக்களின் அழிவுக்கே காரணமானவர்களே இந்த பாதர்மார்கள்தானே. யாரையோ குற்றம் சாட்டி உண்மையான குற்றவாளிகளை தப்பவைத்தார்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிரேன் நேர்மையாகப் பதில் சொல்லுங்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொல்பவர்கள் எதற்கு ஆணுறை பாவிக்க வேண்டும்.

புலிகள் எவ்வளவு உஷாரானவர்கள் பாதிர்மார்களுக்கு தியாமல் போனது எப்படி?

தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதி யில் இப்படி கொலைகள் செய்தால் தங்கள் மேல் பழி வரும் என்று கடற்படைக்கு தெரியாமலிருந்ததோ?

Rahu Rahu Kathiravelu: படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் நடாத்திய திட்டமிட்ட கொலைதான் இது.

சமாதான காலத்தில் புலிகள் இப்படியான கொலைகளை பரவலாகச் செய்தனர். தென்மராட்சி கனகம்புளியடியில் ஒரு குடும்பம் கொலை , புங்குடுதீவில் தர்சினி என்று கொலை செய்யப்பட்டார்கள்.

அல்லைப்பிட்டியில் ஒரு குடும்பம், மானிப்பாயில் மூன்று பெண்கள் என்று பல இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதில் திட்டமிட்டு பல கொலைகளை மேற்கொண்டனர்.

வங்காலையில் கொல்லப்பட்ட மார்ட்டின் குடும்பம் கொல்லப்பட்டவுடன் புலிகளின் இணையதளமான தமிழ்நெற் சுடச்சுட செய்தியை படங்களுடன் வெளியிட்டது.

கடற்படையினர்மேல் பழியைச் சுமத்த புலிகள் திட்டமிட்டுச் செய்த கொலைகள் புலிகளுக்கு வெற்றியைக் கொடுத்தது.

இந்தக் கொலை நடந்தவுடன் வங்காலை மக்கள் அச்சத்தில் வெளியேறத் தொடங்கினார்கள்..

அல்லைப்பிட்டியில் கொலை நடந்தவுடன் அல்லைப்பிட்டி மக்கள் வெளியேறி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிக்குச் சென்றார்கள். வன்னிக்குச் செல்ல மறுத்த மாவீரர் குடும்பம் ஒன்று மானிப்பாயில் கொல்லப்பட்டது.

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வசித்த 6 மாதக் குழந்தை உட்பட பெற்றோரும் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைகளை நடத்திவிட்டு அருகே ஆணுறையும் ஆதாரமாக காட்டப்பட்டது .ஒரு பெண்பிள்ளையை கற்பழித்துக் கொல்கின்ற கடற்படை எதற்கு ஆணுறை பாவிக்க வேண்டும்.

அங்கு பதிந்திருந்த பூட்ஸ் அடையாளம்தானாம் கடற்படையினர் இதனைச் செய்ததற்கான ஆதாரம்.

தமிழ் மக்களுக்கு உளவியல் ரீதீயாக தாக்கம் ஏற்பட புலிகள் செய்த படுகொலைகள் ஏராளம்.

இராணுவ சீருடை அணிந்து வவுனியா எல்லைக் கிராமங்களில் புலிகள் பல தமிழ் மக்களைக் கொன்றதாக தயா மாஸ்டரே கூறினார்.

வித்தியா கொலை கூட கடற்படையின்ர் மேல் பழிபோடும் முகமாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டது ஆனால் கொலையாளிகள் மாட்டிக்கொண்டனர்.. இல்லையென்றால் அது கூட கடற்படையினர் செய்ததாகவே மக்கள் நம்பவைக்கப்படிருப்பார்கள்

சுதாகரன், சுவர்ணவதி, மற்றும் 6 மாதக் குழந்தை வதனன் ஆகியோர் கனகம்புளியடியில் புலிகளால் கொல்லப்பட்டனர்

இக்காலத்தில் நடந்த கொலைகள் எல்லாம் கூ ரிய ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு கொடூரமான முறையில் நடந்தது

Rathnakumar SE: இந்த சம்பவத்தை நான் இணையத்தளத்தில் பார்க்கும் போது அருகில் இருந்த ஒரு சிங்கள நண்பர் கூறினார் இது புலிகளின் வேலைதான் என இராணுவம் இதை செய்தால் இவ்வாறு உடல்களை கொடூரமாக போட வேண்டிய தேவையில்லை என்றார்

Rahu Rahu Kathiravelu: சமாதான காலத்தில் கூரிய ஆயுதங்களால் கொல்லும் வழக்கத்தை புலிகள் கையாண்டார்கள். இராணுவம் கிரிஷாந்தி சாரதாம்பாள் ஆகியோரைக் கொன்றிருக்கிறது , ஆனால் இப்படி கொடூரமாகவெட்டிக் கொல்லவில்லை.

பாவை வேந்தன்: கொலைகளை செய்வதை கலைகளாகக் கொண்டவர்கள் புலிகள்.

95 இற்க்கு பிற்ப்பாடு ரானுவக்கட்டுப்பாட்டு பிரதேசமான பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக நின்று கைக்குண்டை வீசிவிட்டு ஓடிவிடுவார்கள்
புலிகள்.

ஏற்கனவே பதட்டத்தில் நிக்கின்ற ரானுவம் செய்வதறியாது துப்பாக்கி
பிரயோகம் செய்வான் அதில் வீதியால் செல்லும் அப்பாவி மக்கள் ஒரு சிலர் பலியாவார்கள்.

உடனடியாக புலிகளின் குரலில் ரானுவத்தின் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் அப்பாவி பொதுமக்கள் பலி என்பார்கள்.

இதுதான் புலிகளின் தந்திரம்.

இவர்கள் குண்டெறிந்தபடியால்தான்
இவ்வளவு நடத்தது மக்கள் மத்தியில் நின்று இவர்கள் ஏன் குண்டெறிந்தார்கள்
என்று ஒரு சிலரே சிந்திப்பார்கள்.

Gv Venkatesan: இதே வேலையை IPKF இடம் செய்து. பயிற்சி பெற்றார்கள்... அவர்களை விரட்டி அடித்தனர்

http://www.lankaweb.com/news/items04/040204-5.html

No comments: