Monday, May 21, 2018

பிரபாகரனை எதிர்ப்பதில் நமக்கு தயக்கம் தேவையில்லை

பிரபாகரன் தான் ஸ்ரீ சபாவை கொன்றார்,

அமீர் அண்ணாவை கொன்றார்,
பத்மநாபாவை கொன்றார்,

400டெலோ புலிகளை டயர் போட்டு கொளுத்தி கொன்றார். தொழுகையில் இருந்த 200காத்தான்குடி முஸ்லீம்களை கொன்றார்.

75 ஆயிரம் யாழ்ப்பாண முஸ்லீம்களை 2மணி நேர கெடுவில் ஊரை விட்டு விரட்டி அடித்தார் , இங்கு வந்து ராஜீவையும் 18 தமிழர்களையும் கொன்றார்.

இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாது பிரபாவால் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை.

தன் பிறந்தநாளில் 2.5லட்சம் நிதி திரட்டி அப்போதிருந்த 5 அமைப்புகளுக்கு தலா 50ஆயிரம் கொடுத்தார் கலைஞர்.

எல்லா அமைப்புகளும் ஏற்றுக்கொண்டபோது புலிகள் அமைப்பு மட்டும் அந்தப்பணத்தை ஏற்க மறுத்தார்கள்.

திமுக தொண்டர்களின் ஆதரவின் அடையாளமாக இருக்கும் அந்தப்பணத்தை பிரபாகரன் எப்படி மறுக்கலாம் .

கலைஞரின் தலைமையில் எல்லா போராளி அமைப்புகளின் தலைவர்களின் கூட்டமும் நடந்தது.

அதில் கூட பிரபா கலந்து கொள்ள மறுத்தார்.

சபா கொல்லப்பட்டபோது, சகோதர யுத்தம் வேண்டாம் என தலையால் அடித்துக்கொண்டவர் கலைஞர்.

"எல்லோரையும் இணைந்து செயல்பட சொல்லி, சபா கொல்லப்பட நானும் ஒரு விதத்தில் காரணமாகிவிட்டேனே" என கலங்கிப்போய் நின்றவர் கலைஞர் .

இத்தோடு முடியவில்லை. பிரபாகரனால் தான் ஒருமுறை நம் ஆட்சி கலைக்கப்பட்டது, இன்னொரு ஆட்சிக்கான வாய்ப்பையும் 1991ல் இழந்துபோனோம். இதெல்லாம் திமுகவையும் கலைஞரையும் பிரபா உதாசீனப்படுத்திய சம்பவங்கள்.

ஆனாலும் கூட , 2009ல் , பிரபாகரன் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட தகவல் வந்தபோது, ஒருவேளை பிரபா கைது செய்யப்பட்டால் புருஷோத்தம மன்னரைப்போல் நடத்தப்பட வேண்டும் என பேசினார் கலைஞர்.

ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் தான் பிரபாகரன் தலைவர்.

அதே இலங்கையில் இருக்கும் முஸ்லீம் தமிழனும், நம் மலையக தமிழனும் கூட பிரபாகரனை தலைவனாக ஏற்கவில்லை என்னும்போது இந்தியத்தமிழனான நாம மட்டும் பிரபாவை எதுக்கு ஏத்துக்கணும்.

ஒரு வேளை தமிழ் ஈழம் அமைந்திருந்தாலும் கூட , முஸ்லீம் தமிழனும், மலையகத்தமிழனும் கூட அதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எண்ணும்போது இவர்களைப்பற்றி நாம் எதுக்கு தம் கட்டி பேசணும் .

புலிகளால் இன்றளவும் கடைபிடிக்கப்படும் மாவீரர் தினம் என்பது , ஈழப்போராட்டத்தில் இறந்த எல்லா இயக்க போராளிகளுக்கு்மானது இல்லை என்பதை நாம் ஏற்கிறோமா?

இறுதிப்போரில் புலிகளால் மனித கேடயமாக வைக்கப்பட்டு இறந்து போன அந்த ஆன்மாக்களுக்கும், பிரபாகரனின் ஆணைக்கு வேறு வழியில்லாமல் இணங்கி இறந்துபோன அந்த போராளிகளுக்கும் நம் கனிவுப்பார்வையும், அனுதாபங்களும், வீர வணக்கங்களும் உண்டு .

ஆனால் பிரபாகரனை எதிர்ப்பதில் நமக்கு தயக்கம் தேவையில்லை. பிரபாவை எதீர்ப்பதில் , ஒரு கட்சியாக திமுகவுக்கு சில தர்ம சங்கடங்கள் இருக்கும்.

ஆனால் இணைய திமுககாரனுக்கு அதெல்லாம் இல்லை . நம் தரப்பு நியாய தர்மங்களை உரக்க எடுத்து சொல்லலாம்

No comments: