Wednesday, May 23, 2018

கேள்வி பதில் - திமுக என்ன செய்ய முடியும்

கேள்வி: நாட்டில் இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதே? செயல் தலைவர் என்ன செய்யப் போகிறார்?

பதில்: ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பலாம். குண்டுக்கட்டாக அவையை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். விசாரிக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

#Gobackmodi என்று உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடத்தலாம். நீட்டுக்கு நம் பிள்ளைகளை ஊர் ஊராக அலைய விட்டுப் பழி வாங்குகிறார்கள்.

எதிர்க்கட்சி என்பது ஏதோ திரைப்படங்களில் வருகிற நாயகனுக்கு உரிய சாகசத் தன்மை கொண்ட பதவி என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது, அப்படி ஒரு எதிர்பார்ப்பைப் பரப்புவதன் மூலம் எதிர்க்கட்சி செயல் திறனற்றது என்ற தோற்றத்தைக் கட்டமைக்கிறார்கள். இதை விடக் கொடுங்கோன்மையான எம்.ஜி.ஆர். ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் செய்ய முடியாத எதையும் தற்போதைய செயல் தலைவர் செய்ய முடியாது.

இவை அனைத்தையும் தாண்டி ஒரு எதிர்க்கட்சி செய்யக்கூடியது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி தேர்தல் மூலம் ஆளும் கட்சியை அகற்ற முனைவது தான். அதனை மிகச் சரியாகவே செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடைவதைத் தடுக்க புரட்சி, போர், சிஸ்டம், மையம், தேர்தல் புறக்கணிப்பு என்று முனகும் புதிய காளான்களை மிதித்து,

படி. வேலைக்குப் போ. கோபத்தைத் தேக்கி வை.

வாக்களிக்கும் வரை காத்திரு!

கேள்வி: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால் ஆட்சியைக் கலைக்கலாமே?

பதில்: டேய் நோட்டாவுக்குப் பிறந்த வாட்சாப்பு மண்டையா, வாயில நல்லா வருது. இருந்தாலும் பொறுமையா சொல்றேன். கேட்டுக்கோ.

எல்லா எதிர்க்கட்சி உறுப்பினரும் பதவி விலகினாலும் ஆட்சி கலையாது. அவற்றுக்கு மீண்டும் ஆறு மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கனவே 18 சட்ட மன்ற உறுப்பினர்களைப் பதவி விலக்கி ஆறு மாசம் ஆகியும் தேர்தல் வரவில்லை. நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிப்பது அவசரம் இல்லை என்கிறது. அப்படியே இடைத் தேர்தல் வந்தாலும் ஆளுங்கட்சி தில்லாலங்கடி வேலை பார்த்து இப்போது இருக்கிற இடங்களை விடக் கூடுதல் இடம் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெறும்.

அப்புறம், எதிர்க் கட்சிகள் பொறுப்பில்லாமல் பதவி விலகினார்கள்னு அதுக்கு வேற தனியா மீம்சு போடுவீங்க.

திமுகன்னா திட்டுறதுன்னு முடிவாகிடுச்சு. கொஞ்சம் லாஜிக்கோடவாவது திட்டுங்கடா. கர்நாடகத்தில் நடந்த கூத்தை எல்லாம் பார்த்த பிறகும் இப்படி எல்லாம் கேக்காதீங்கடா. எங்களைப் படிக்க வைச்சுத் தொலைச்சிட்டாங்க.

No comments: