Wednesday, May 23, 2018

ஆயுத வன்றமுறைப் போராட்டங்களை முன்மொழிபவர்கள் எவருமே களத்திற்கு செல்வதில்லை

ஆயுத வன்றமுறைப் போராட்டங்களை முன்மொழிபவர்கள் எவருமே களத்திற்கு செல்வதில்லை. பதிவிட்டு தூண்டி விடுவதோடு சரி, தங்களது அன்றாட வேலையை கவனிக்க சென்று விடுவர்.
என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா?
பிபி மாத்திரை சாப்பிடுங்கள்.
இந்த போராட்டமே வாழ்வாதாரத்துக்கான போராட்டம், உரிமைக்கான போராட்டம். வாழ வேண்டும் என்கிற ஆசைக்காகவே மக்கள் போராடுகிறார்கள்.
அங்கே யாரும் martyrdom அடைவதற்காகாே, ஒரு சிலையாகவே, நினைவுத்தூணாகவோ நிற்பதற்காக போராடவில்லை. எல்லாேருக்கும் உயிர் மீது ஆசை இருக்கும்.
பெரியார் போராடச் சாென்னார், இங்கே அதே காெள்கையின் பேரில் அறவழிப்போராட்டமே சரியான அணுகுமுறை, அதுவே தமிழ்நாட்டை நல்வழிப்படுத்தியிருக்கிறது முன்னேற்றி இருக்கிறது, பல விஷயங்களை பெற்றும் தந்திருக்கிறது.
அரசு நம்மை விட வலிமையானது, எடப்பாடியின் இந்த பினாமி அரசு மக்கள் பக்கம் நிற்பதற்கான வாய்ப்பே இல்லை. வன்முறையை கையில் எடுத்தால், முடிவு நம் கையில் இல்லை, எதாவதொரு எஸ்எல்ஆர் அசால்ட் ரைஃபிளின் முனையில் நம்ம உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அந்த ரைஃபிளின் முனை, வன்முறையை தூண்டி விடுபவர்கள் மீதே திரும்பும் பொழுதுதே அந்த வலியும் வேதனையும், இவர்களுக்கும் இவர்களை நம்பியிருக்கும் குடும்பத்திற்கும் புரியும்.
போராடவே வேண்டாம் என்கிறீர்களா என்றாெரு கேள்வி எழுகிறதா?
நிச்சயம் எழும், அதை செவிலில் தட்டி உட்கார வையுங்கள்.
இங்க சில பிரபலங்கள் தூண்டிவிடுகிற மாதிரி வன்முறையாக போராட வேண்டாம் என்று தான் கோருகிறேன், போராடவே வேண்டாம் என்று கூறவில்லை.
நம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக்காக வன்முறையை கையாள்வது வேறு, அதே சமயத்தில் போராட்ட முறையாக வன்முறை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வேண்டுமென்றால், பதிவிட்டவர் எந்தெந்த வன்முறை போராடங்களில் முன் நின்று கலந்து கொண்டார் என்பதை கேளுங்களேன்...
அடுத்த முறை நாமும் அவர் தலைமையிலேயே ஆயுதங்களுடன் கலந்து காெள்ளலாம். குறைந்தபட்சம் அவர் கோலோச்சும், ரவுடியிஸம் செய்து தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வடசென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கும் எஸ்பி.மகேந்திரனை நேரில் சென்று கேள்வி கேட்கட்டுமே, ஒத்துக்கொள்கிறேன் பெரிய புரட்சிப்புடுங்கியாக.

No comments: