Wednesday, May 23, 2018

நாளைக்கு உங்களையும் ஹிந்துத்துவம் வீழ்த்த ஆரம்பிக்கும். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் சாதீய சமூக அமைப்புகளில், நாடார் சமூகம் தான் பாஜகவினை முதலில் கையிலெடுத்தது. அதற்கான காரணங்கள் தெளிவானவை - தொழில். அதற்கு பின்னால், மேற்கு மண்டலம் பாஜகவை ஆதரிக்க ஆரம்பித்தது.
இன்றைக்கு நாடார் சமூகம் கோலோச்சிக் கொண்டிருக்கும் தூத்துக்குடியில் தான் இந்த கொடுங்கொலைகள் பாஜகவின் ஆணையின் படி, தமிழக அரசால், கார்ப்பரேட் நலன் கருதி நிறைவேற்றப் பட்டுக் கொண்டு இருக்கின்றன. கடும் உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்த சமூகம் நாடார்களுடையது. இன்றைக்கு உங்கள் மண்ணில் தான் ரத்தம் வழிந்தோடிக் கொண்டு இருக்கிறது.
இந்துத்துவம் தனக்கு தேவையானவற்றை தூக்கி வைத்துக் கொண்டுக் கொண்டாடும். காரியம் முடிந்தவுடன் கீழேப் போட்டு மிதிக்கும். அதிலும் கார்ப்பரேட் + வலதுசாரி + மதபோதை என்பது ஒரு heady cocktail. நீங்கள் ஏமாந்தது போதும், இனியாவது இந்த பாஜக மாயையிலிருந்து வெளியேறுங்கள். நல்லபாம்பு குட்டிகள் கூட பார்க்க அழகாகவும், கவர்ச்சியாகவும் தான் இருக்கும். ஆனால் அவற்றை துணையாக வளர்த்தால் ஒரு நாள் உங்களையே கொத்தும். பாம்பிற்கும், பாஜகவிற்கும் ஒரு வேறுபாடும் கிடையாது.
மேற்கு மண்டல தொழில்துறை நண்பர்களுக்கு,
இன்றைக்கே தமிழர்களின்றி வட மாநில, வட கிழக்கு மாநில தொழிலாளர்களை வைத்து தான் தொழில் அங்கு நடக்கிறது. படிப்பறிவற்ற, ராம் நாம் சத்ய ஹே, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களில் எளிதில் மயங்கக் கூடிய இந்த பணியாளர்கள் தான் பாஜகவின் நேரடி டார்க்கெட். நாளைக்கு உங்களையும் ஹிந்துத்துவம் வீழ்த்த ஆரம்பிக்கும். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள். மதபெரும்பான்மை அடிப்படைவாதத்தினை ஆதரித்த எவரும் நிம்மதியாக வாழ்ந்ததாக உலகெங்கிலும் சான்றுகள் இல்லை. இந்த rabbitholeக்குள் சிக்கிக் கொண்டால் கதை முடிந்து விடும்.
இவர்கள் உங்களைக் காக்கும் வேலிப்போல முதலில் இருப்பார்கள். ஆனால் இது அரணல்ல. வேலியே பயிரை மேய்ந்த, சீரழித்த கதை தான் எல்லா இடங்களிலும். பார்த்துக் கொள்ளுங்கள். இனியாவது இந்த சங்காத்தத்தை விட்டொழித்து விட்டு, விழித்துக் கொள்ளுங்கள்.

No comments: