Thursday, May 24, 2018

ஒரு பில்லியனர் இப்போதைக்கு ப்ரேக் எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னால், அதன் அர்த்தம்

Read between the lines.
அனில் அகர்வால் இருக்கும் உயரத்திற்கு, அவர் ரெகுலர் மெயிண்டெனென்ஸ் வேலைகளுக்காக ஆலையை மூடுகிறோம் என்கிற ஸ்டேட்டஸ் அப்டேட் எல்லாம் சொல்லத் தேவையில்லை. இதை சொல்ல வேண்டியது, ஸ்டெர்லைட்டின் Infrastructure VP.
ஒரு பில்லியனர் இப்போதைக்கு ப்ரேக் எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னால், அதன் அர்த்தம்
‘முட்டாப்பயல்களே, உங்களை நம்பி (Modi & Co, EPS & Co and others) தானே இவ்வளவு பணத்தையும் கொடுத்தேன், கடைசியில் மூட வைத்து விட்டீர்களே. இப்போது வழக்கும் போட்டு, அது ஏகப்பட்ட துறைகளுக்கு ரவுண்டும் அடித்து வரும். இதற்கு நடுவில், சர்வதேச சந்தையில் என் பெயரை நாரடிக்க விட்டு விட்டீர்களே, இந்த 3000 கோடி ரூபாய்க்காக காத்துக் கொண்டு இருந்தால், மற்ற நாடுகளில் நான் போட்டிருக்கும் பல்லாயிரம் கோடிகள் நக்கிக் கொண்டுப் போய் விடும். இப்போதைக்கு சட்டையில் மண் ஒட்டவில்லை என்று கிளம்புகிறோம்’
என்றுப் பொருள். They are heading for a total shutdown but will sue Tamilnadu Government. Before that, we should sue them in London.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு.
மக்களே இத நம்பாதீங்க.
சட்டசபையில் முறையாக விவாதிக்கபட்டு
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை நகலையும் இணைத்து மத்திய அரசுக்கு அனுப்ப பட வேண்டும்.
மத்திய அரசும் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு (அப்பொழுது சுற்றுசூழல் அமைச்சர் அந்த அறிக்கை எங்கள் கைகளுக்கு கிடைக்கவே இல்லை என்று நிர்மலா சீதாராமன் போல் சொல்லாமல் இருக்க வேண்டும்) அதை மத்திய சுற்று சூழல் துறைக்கு அனுப்பி அறிக்கை கேட்கும். இந்த ஆலையை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா என்று.
மத்திய சுற்றுசூழல் நேரடியாக ஸ்டெர்லைட் கம்பெனியில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்றதா? இல்லையா என்று...?
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் மத்திய அரசே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும்.
எங்கே மத்திய சுற்றுசூழல் அமைச்சர் டாக்டர்.ஹர்சவர்தன் அவர்களை கூப்பிட்டு ஒரு அறிக்கை விட சொல்லுங்கள் பார்ப்போம்.
மக்களே நீட் தேர்வில் எவ்வாறு ஏமாற்றப்பட்டோமோ அதே போன்று தான் இதுவும்.

No comments: