Thursday, May 24, 2018

அரசின் போலீஸ் அராஜகங்கள்

மாஞ்சோலை எஸ்டேட் போராட்டம் தூத்துக்குடி போராட்டம் போல கலெக்டர் ஆஃபீஸ் முற்றுகை போராட்டம் .அங்கே சுடும் ஆர்டர் யாருக்கும் வழங்கப்படவில்லை.பிரச்சினையை மாவட்ட ஆட்சியரும் ,காவல்துறை எஸ் பியும் தான் ஹாண்டில் செய்தார்கள்.
மக்களை அழைத்து சென்ற போராட்டத்துக்கு தலைமை தங்கியது தமாகவின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சோ பாலகிருஷ்ணன் .அவர்கள் திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்து சில மாதங்களுக்கு முன்பு தான் எதிர் அணியானவர்கள் .
இதில் நேரடியாக முதல்வர் கலைஞர்,திமுக அரசை முக்கிய குற்றவாளிகளாக காட்டுவது சரியான ஒன்றாக தெரியவில்லை.படுகொலைகளுக்கு காரணமாக இருந்த அதிகாரிகளை காப்பாற்றினார் மற்றும் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தவறி விட்டார் என்பதில் நியாயமும் அர்த்தமும் உண்டு
திமுக அரசு காவல்துறையினரை செயல்பட விடாத அரசு என்று தான் பெரும்பாலான காவல்துறையினரே பேசுவர்.இது உண்மையும் கூட
போலீஸ் அராஜகம் பற்றி வரும் குறிப்புக்கள் ,பதிவுகள் சில மாஞ்சோலை எஸ்டேட் இல் இருந்து துவங்குகின்றன .சில பதிவுகள் விவசாயிகளை எம் ஜி ஆர் அரசு சுட்டு கொன்றதில் இருந்து துவங்குகின்றன .சில இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெறியாட்டம் ஆடிய பக்தவச்சலம் அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் அரசின் போலீஸ் அராஜகங்களில் இருந்து துவங்குகின்றன
எதிலும் எம் ஜி ஆர் காலத்தில் தான் மிக அதிக அளவில் போலீஸ் கொலைகள் நிகழ்ந்ததையோ .நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நக்சலைட் என்று போர்வை போர்த்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதோ,.
இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் போலீசால் சுட்டு கொல்லப்பட்ட 21 பேர் நிகழ்வு சேர்த்து சொல்லப்படுவதில்லையே ?
என்ன காரணம்

No comments: