Thursday, May 24, 2018

மக்களின் உரிமைக்குரல் "அவாளின் ஸங்கீத ஸாதகத்திற்கு" இடையூறாகத் தெரிகிறது

முடியாட்சி காலம் தொட்டு எத்தனையோ போர்கள் இந்த மண்ணில் நடைபெற்றிருந்தாலும் எந்த மண்ணனும் அக்ரகாரத்தின் அமைதியை குலைத்ததில்லை.
எனவேதான் இன்று ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைக்குரல் கூட "அவாளின் ஸங்கீத ஸாதகத்திற்கு" இடையூறாகத் தெரிகிறது.
என்ன செய்வது? பார்ப்பனர்கள் ஒரு ரூபாய் வெள்ளைத் தாளில் உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு கச்சிதமாக முடித்துக் கொள்ளும் காரியத்தைக் கூட நாம் வீதிக்கு வந்து போராடி, குழந்தை குட்டிகளுடன் நின்று குரல் எழுப்பி, தெருநாய்களைப் போல் சுடப்பட்டு, அழுது அரற்றி, கதறித் துடித்து, புலம்பித் தவித்துதானே செய்து கொள்ளமுடிகிறது?
இதுவரை அக்ரகாரத்தினர் தடதடக்கும் பூட்ஸ் ஒலிகளையும், படபடத்து வெடிக்கும் துப்பாக்கிகளையும், அலறிக் கொண்டு விரையும் அவசர ஊர்திகளையும் அவர்கள் கண்டதில்லை.
அக்ரகாரத்தின் இந்த அமைதியை கெடுக்க வேண்டுமென்பது நமது நோக்கமல்ல...
எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் இதேபோல அமைதியாக வாழவிடுங்கள் என்றுதான் போராடுகிறோம்.
இது இனத் துவேஷமோ,
பார்ப்பனத் துவேஷமோ அல்ல...
இதன் பெயர் சமத்துவம்.

No comments: