Tuesday, May 22, 2018

நம் அரசர்கள் அவர்களின் அடிமையாக இருப்பார்கள். அவர்கள் ராஜகுருக்களாக இருப்பார்கள்

தமிழகம் வெறும் நூறாண்டுகள் தான் முற்போக்கு மண், பெரியாரிய மண் என்பதெல்லாம். தமிழகம் ஆயிரம் ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் மண் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்தியாவின் ஆர்எஸ்எஸ்சின் அடித்தளம் தமிழகம் தான், வடக்கல்ல. குப்தர்களின் ஆட்சிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இங்கு நடந்த மன்னராட்சிகள். மனு தர்மமும், வர்ணாசிரமமும் தழைத்திருந்த மண் இது. அதன் எச்சங்கள் தான் நூறாண்டு சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு பிறகும் நம்மை விடாமல் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. காந்தியை கொல்ல திட்டம் தீட்டியது அன்றைய தமிழக ஆர்எஸ்எஸ்!
நிற்க!
இன்று நம் கண்ணுக்கு தெரிந்தும், கண்ணுக்கு தெரியாமலும் பல சதிகள் நடைப்பெறுகிறது. பல வழிகளில், பல வேலைகளை ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது. அது எல்லாமே அவர்களின் தொலை நோக்கு திட்டங்கள். இன்று அவர்கள் நோட்டாவிடம் தோற்கிறார்கள் என்று நாம் ஏளனம் செய்யலாம். ஆனால், வரலாறை படியுங்கள். அவர்கள் என்றுமே நம்மை நேரடியாக ஆட்சி செய்தது கிடையாது. அவர்கள் நம் கையை கொண்டே நம் கண்ணை குத்துபவர்கள். நம் அரசர்கள் அவர்களின் அடிமையாக இருப்பார்கள். அவர்கள் ராஜகுருக்களாக இருப்பார்கள். இன்று நடப்பதும் அது தான். அவர்களுக்கு இருப்பது நூறாண்டு பகை தமிழகத்தின் மேல். காத்திருந்து அழிக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் காத்திருந்து பௌத்தத்தை அழித்தவர்கள் அவர்கள். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்போதும் நாம், திராவிடம், தலித்தியம், தேசியம், கம்யூனிசம் என பிரிந்து கிடந்தால் நாம் இழப்பது மிக அதிகமாக இருக்கும். கை கோர்கும் காலமிது. ஒற்றை எதிரி ஆர்எஸ்எஸ் என மனதில் கொள்வோம். எல்லா இடத்திலும், ஒன்று சேர்ந்து போராடுவோம்!

No comments: