Wednesday, May 23, 2018

உண்மையான எதிரி யார்?

உண்மையான எதிரி யார்?
=====================
மோடி& அவரின் அடிவருடிகளால் திட்டமிட்டு எடப்பாடி & கிரிஜாவால் நடத்தப்பட்டு இருக்கிறது தூத்துக்குடி பயங்கரவாத படுகொலை.
இல்லைன்னா துணை ராணுவம் கேட்பதும் அதற்கு யூனியன் உள்துறை செயலாளர் 'உதவத்தயார்'னு சொல்றதும் இவ்வளவு விரைவாக நடக்காது. இங்கிருக்கும் பக்தாளின் குதூகலிப்பும் இதை உறுதிப் படுத்துகிறது.
இந்த சூழ்நிலையில் உண்மையான குற்றவாளி யார் என கண்டு கொள்வது மிக அவசியம்.
மோடி, பாஜக தலைவர்கள், இந்த ஆட்சியை கொண்டுவந்த ஜெயலலிதா, இப்போது நடத்துவதாக எண்ணிக் கொண்டு இருக்கும் எடப்பாடி, பன்னீர்
இவர்கள் எல்லாரையும் விட
கீழ்க்காணும் மனிதர்கள் தான் என்னைப் பொறுத்தவரை முக்கிய குற்றவாளிகள்.
1. நம் பக்கத்திலேயே இருந்து கொண்டு, பொய்யான ஊழலை ஒழிய குரல் கொடுப்பவன் ...
2. மற்ற நாடுகளை மேம்போக்காக சொல்லி நம்நாடு வளரவில்லை என்று‌சொல்பவன்
3. ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் எதிர்க்கட்சியையும்‌ சேர்த்து குறை சொல்பவன்.
4. ஜல்லிக்கட்டு, ஐபிஎல் போன்ற‌ அற்ப விஷயங்களில் நம் கவனத்தை செலுத்த மெசேஜ் போடுபவன், டிவி ஷோவை நடத்துபவன்.
5. டிவில பாக்குற நியூஸின்‌ நம்பகத்தன்மை பற்றிய கவலை இல்லாதவன்.
6. ஆளுங்கட்சியின்‌ அடக்குமுறை, விலையேற்றம், பணமதிப்பு நீக்கம் மாதிரியான விரோத திட்டங்கள் கண்டு மனம் பதறாமல் தன் வேலை உண்டு என்று போய்க் கொண்டிருப்பவன்.
7. பார்ப்பன சக்திகளை அடையாளம் காணாமல் 'இப்பலாம் எந்த பார்ப்பான் ஆதிக்கம் பன்றான்?' என்று கடந்து போகிறவர்கள்.
இவர்களை விரோதிகளாக பார்க்க வேண்டாம்... ஏன்னா நம் வீட்டிலேயே கூட இந்த மாதிரி மனிதர்கள் இருக்கலாம்...
இவர்கள் சொல்வதை நம்பாமல் இருந்தாலே போதும்.
முடிந்தால் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும்.

No comments: