Monday, May 21, 2018

நாய் டம்ளர்

கிறுக்கன் :- நான் தமிழர்... நான் தமிழர்...
பொதுமக்கள்:- டேய்.. நீ தமிழன்னா நாங்க யாருடா?
கிறுக்கன் :- இது என் கட்சி பேரு
பொதுமக்கள்:- உன் கட்சி கொள்கை என்ன?
கிறுக்கன் :- தனி ஈழம் வாங்கிறது
பொதுமக்கள் :- அப்ப ஈழத்தில் போய் கட்சி ஆரம்பிக்காம இங்க ஏன் கத்திக்கிட்டு இருக்க.
கிறுக்கன் :- தமிழகத்தில் ஆட்சியை பிடிச்சி தனி ஈழம் வாங்குவோம்
பொதுமக்கள் :- ஆட்சியை பிடிப்பீங்களா !!
கிறுக்கன் :- 2010 ல் ஆரம்பிச்ச கட்சி. மொத்த இளைஞர்களும் எங்க பக்கம்தான்
பொதுமக்கள் :- அப்படியா 2016ல்
232 தொகுதியில் போட்டி போட்டு
எல்லாத்திலும் டெபாசிட் காலியாமே மொத்தமே 4,00,000 ஓட்டுதானே வாங்குனே
கிறுக்கன்:- அடுத்த தேர்தலில்
ஜெயிப்போம் .
பொதுமக்கள்:- பாமக 25 லட்சம் ஓட்டோடு 20 வருசமா ஆட்சிக்கு வரலியே. இன்னும் 20 வருசம் ஆனாலும் எப்படியும் ஜெயிக்கவே போறதில்லைன்னு தெரிஞ்சே ஈழம் வாங்கப்போறேன்னு சொல்லி அதுவும் வெளிநாட்டில் வாங்கப்போறேன்னு சொல்லி அந்த ஈழத்தமிழர்களை ஏமாற்றுவது நியாயமா?
கிறுக்கன் :- அதெல்லாம் இல்லீங்க. நிச்சயம் தனி ஈழம்தான்.
பொதுமக்கள் :- ( தலையில் அடித்துக் கொண்டே) உருப்படவே மாட்டீங்கடா

No comments: