Wednesday, May 23, 2018

தமிழகத்தை இன்னொரு ஈழமாக மாற்ற முயல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை

இலங்கை, இந்தியா-னு எங்க யார் என்ன பன்னாலும் பழி போட கலைஞரும் திமுகவும், அத நம்ப மக்களும் இருக்கும்போது எடப்பாடிகளும், மோடிகளும் ஏன் செல்லூர் ராஜூகளும் என்ன வேணா தைரியமா பன்னுவாங்க.. திமுகவும் எதிர்வினையாற்றாம இருக்கும், இவனுங்க இஷ்டத்துக்கும் அவதூறுகளை பரப்பி விடுவானுங்க,
மக்கள் வழக்கம்போல திமுக-வ திட்டிட்டு தேர்தல்ல அதிமுகவுக்கு ஓட்ட போட்டுட்டு, அவன் இந்த மாதிரி ஏதாவது படுபாதகமா பன்னும்போது மட்டும் திமுக வேஸ்ட்டு, ஸ்டாலின் வேஸ்ட்டு, ஆட்சிய கலைக்க கூட முடியல அப்றம் எதுக்கு எதிர்க்கட்சினு இருக்காங்கனு கேட்டுட்டு,
அப்டியே “நீ கற்பழிச்சா நானும் கற்பழிப்பேன்”, “பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டான்” “28 கிலோ ஆம கறி தம்பி, திருப்பி போட்டா படகு தம்பி” “நான் பேசுவதற்கு முன்பு வரை பிரபாகரனை அனைவரும் தீவிரவாதியாகத்தான் பார்த்தார்கள்” என்றெல்லாம் உளறிய சீமான்,
“பேரறிஞர் அண்ணா அன்று 1963-ல திராவிட நாடு கோரிக்கையை கைவிடாம இருந்திருந்தா தனி தமிழ்நாட்ட இன்னைக்கு போராடி 2018-ல வாங்கியிருக்கலாம்”, “ஈழப்போராட்டத்தின்போது மக்கள் போராட்டத்தை ஒடுக்கிய கருணாநிதியை விட எடப்பாடி எவ்வளவோ மேல்” என்றும் தற்போது நடைபெற்ற தூத்துக்குடி கலவரத்திற்கு கூட, காவலர்களையும், மாவட்ட ஆட்சியாளரையும் மட்டுமே கண்டித்து கண்டனத்தில் “முதல்வர்/எடப்பாடி” என்ற வார்த்தைகள் வராமல் எடப்பாடி மீதான தன்னுடைய பாசத்தையும், தனக்கு எலும்பிட்ட எஜமானுக்கு விசுவாசமாகவும் அறிக்கை விட்ட திருமுருகன் காந்தி,
கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு போராடிய மூதேவி, யார் எங்கு எதற்காக போராடினாலும் அங்கு சென்று உண்டியல் குலுக்கும் கேவளமான இழி பிறவி கௌதமன்,
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை எதிர்த்து போராடினார்கள், அப்போதும் போட்டியை காண வந்த தமிழக பெண்களின் டி-ஷர்ட்டுகளை கலைந்து விடுவோம் என மிரட்டிய, போட்டியை காணச்சென்ற இளைஞர்களை அடித்த குழுவிற்கு தலைமை தாங்கிய களஞ்சியம், பாரதிராஜா, அமீர்
போன்ற அடிப்படை அறிவோ, அரசியல் அறிவோ, வரலாற்று அறிவோ இல்லாமல் கண்டதை உளறிக்கொட்டி உண்டியல் குலுக்கும் நபர்கள் பின்னாடி போய்டுறாங்க.. அவர்களும் மக்களை உசுப்பேத்தி இது போன்ற தமிழகத்தில் இதுநாள் வரை ஏற்படாத பாதகங்களை ஏற்படுத்திவிட்டு அவர்கள் வழக்கம்போல கண்டனம், அகர்வால், மோடி உருவ பொம்மை எரிப்பு என்ற நிலையில் அடங்கிவிடுகிறார்கள்.!!
நேற்று நடைபெற்றவைகள் எல்லாம் குஜராத் மாடல் போன்று இருக்கிறதாம். தமிழகத்தை பாஜக ஆள்கிறதாம் உண்மை தான்.. ஆனாலும்,
“தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு”
என்ற வரிகளுக்கேற்ப, அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள் என்பவர்கள் தான், தமிழர்கள், அது தான் தமிழ்நாட்டு மாடல், இதையெல்லாம் இன்று ஒழித்து, உணர்ச்சிவசப்பட வைத்து இத்தகைய நிலைக்கு தமிழகத்தை இட்டுச்சென்றவர்கள் விரைவில் தமிழகத்தை இன்னொரு ஈழமாக மாற்ற முயல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. போராட்டத்தின்போது இவர்கள் எங்கே சென்றார்கள் ? என்ற கேள்வி எழுகிறதா ? இவர்கள் அனைவரின் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் என்றுமே ஜனநாயக ரீதியில் போராடுவது தான் சிறந்தது என்பது என் கருத்து.
அதிமுக ஏன் எப்போதும் போராடுவதே இல்லை, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏன் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று ஜனநாயக ரீதியிலே போராடுகின்றன, என்பதையெல்லாம் தயவுசெய்து ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்..!! உயிர்க்கொடை விலைமதிப்பில்லாதது..!!

No comments: