Friday, May 11, 2018

சிப்பாய்க் கலகம் ஏன்??

சிப்பாய்க் கலகம் ஏன்??
மே மாதம் 10ந்தேதி.
இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள். பட்டியலின மக்களுடைய வாழ்க்கையையே அடியோடு புரட்டி போட்ட நாள். பட்டியலின மக்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட நாள். இன்று தான், இந்தியாவின் முதல் புரட்சி என்றழைக்கப்படும் சிப்பாய்க் கலகம் வெடிக்கத் தொடங்கியது. இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கலகம் தான் இந்தியாவின் உண்மையான முகத்தை உலகிற்கு முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்தியாவில் பெருமளவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தனர் பிரிட்டிஷார். கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை என்னும் சதி ஏறுதலைத் தடை செய்தனர் பிரிட்டிஷார். ஹிந்துதர்ம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல், பெண்கள் மறுமணம் செய்வதை ஊக்குவித்தனர் பிரிட்டிஷார். ஹிந்துதர்மத்தின் புனிதமே கெட்டுவிட்டதாகக் கருதினர் மக்கள். அவையெல்லாவற்றையும் விட ஒரு பெரும் சட்டம் கொண்டுவந்தனர் பிரிட்டிஷார். அது தான் இந்தியாவெங்கும் ராணுவ வீரர்களை வீறுகொண்டு எழ வைத்தது. 1856ஆம் ஆண்டு, 'பொது ராணுவ சிவில் சட்டம்' கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இந்திய ராணுவத்தில் பட்டியலின மக்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஹிந்துக்களால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்கள் ராணுவத்தில் சேர்ந்து, ஹிந்துக்களுக்கு இணையாக சட்டை அணிவது, தொப்பி அணிவது, ஷூ அணிவது என்று இணையாக நடந்துக்கொண்டதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியாவெங்கும் கலகம் வெடித்தது. அப்போது, பிரிட்டிஷ் ராணுவத்தில் மொத்தம் 22பட்டாலியன்கள் இருந்தன. அதில் 20பட்டாலியன்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கலகத்தில் ஈடுபட்டன. அந்த 20பட்டாலியன்களையும் எதிர்த்து நின்றன 2பட்டாலியன்கள். அந்த 2பட்டாலியன்கள் யாரென்றால்,
மதராஸ் பிரசிடென்சி ஆஃப் பறையாஸ்
மும்பை பிரசிடென்சி ஆஃப் மஹார்ஸ்
இந்த இரண்டு வீரமிக்க பட்டாலியன்கள் அந்த 22பட்டாலியன்களை ஒரு ஆண்டு 41நாட்கள் எதிர்த்து நின்று ஓட ஓட விரட்டி அடித்தனர்.
பிறகு பிரிட்டிஷார், கலகத்தை நிறுத்த
'பொது சிவில் ராணுவச் சட்டத்தை'த் தடை செய்தனர். 1858ல் இருந்து பட்டியலின மக்கள் ராணுவத்தில் சேர தடைசெய்யப்பட்டனர். இந்த தடை சட்டத்தை விதித்த பிரபுவை மக்கள் கருணை உடையவர் என்று மக்கள் கொண்டாடினர். அந்த பிரபு தான்
'கருணையுள்ள' கார்னிங்க் பிரபு.
"உங்களுக்கு ஏன் பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்கிறீர்கள்???"
என்று சைமன் குழு கேட்டதற்கு,
போதிசத்வா அம்பேத்கர் சிப்பாய்க் கலகத்தை எடுத்துக்கூறி,
"நாங்கள் பணியில் சேருவதை பிரிட்டிஷாரே விரும்பாத போது, எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்???" எனக் கேட்டார்.
அன்றிலிருந்து தான் தாழ்த்தப்பட்டமக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

No comments: