Saturday, May 23, 2020

உள்நாட்டு ஃபார்வட் ப்ளாக் என்கிற இடது ஆதரவுக் கட்சியின் சரிவை ஆராய்வது வெளிச்சத்தைத் தரலாம்

பிரிட்டிஷ் காலத்து காங்கிரஸ் கட்சிக்குள் எம்.கே காந்தியின் அகிம்சை வழியை ஏற்ற மிதவாத போக்கும்,    போஸ் தலைமையை ஏற்ற தீவிரவாதப் போக்கும் இருந்தது.

நாளடைவில், காங்கிரசில் இருந்தபடியே தமது ஆதரவாளர்களை இணைத்து ஃபார்வர்ட் பிளாக்கை 1939 இல் உருவாக்கினார் போஸ்.

அதில் புரட்சிகர எண்ணப் போக்குகள் இருப்பினும் அவை மார்க்சிய தத்துவப் பின்புலத்தைக் கொண்டவையாக இருக்கவில்லை.

இனவெறியாளன் ஹிட்லரைச் சந்தித்து ஆதரவு கேட்கத் தயங்காத போஸின் நிலைப்பாட்டிற்கு இதுவும் ஒரு காரணம்.

மேற்கத்திய கல்வி தந்த அறிவும்
உள்ளூர் ஹிந்து தேசிய உணர்வும் சேர்ந்து 'ஜெய்-ஹிந்த்' என்று முழங்கிய போஸை, பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு மிகவும் பிடித்துப் போனது.

ஆனால் போஸின் ஐஎன்ஏ, போரில் தோற்று, பிறகு போஸ் அடையாளமற்று தொலைந்து போனதும், பார்வர்ட் ப்ளாக் தொய்வடைந்தது.

பிறகு, 1946இல் போஸ் ஆதரவாளரான R.S.ரூய்க்கர், அக்கட்சியை மீள் உருவாக்கம் செய்தார். அதில், ஜோக்லேகர் போன்ற இடதுசாரி தலைவர்களும் இணைய, ஃபார்வட் ப்ளாக் வர்க்க முரண்களை எதிர்த்துப் போராடும் இடதுசாரி கட்சியாக உருவெடுத்தது.

எனினும், 1948லேயே இரண்டாக அக்கட்சி உடைந்தது. அது, இடதுசாரி குழுக்களின் தொடர் உடைபடு பண்பை ஒத்திருந்தது.

எது எவ்வாறாயினும், நாட்டின் பிற பகுதிகளில் ஃபார்வட் ப்ளாக் இடது நிலைப்பாட்டில் பிற இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தேர்தல்களை சந்தித்து வருகிறது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் அக்கட்சி பசும்பொன் மு.ராம் ஆதரவு முக்குலத்தோர் கட்சியாக சீரழிந்தது.
எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் அதன் தமிழகத் தலைவராக நடிகர் கார்த்திக்கை உட்கார வைத்திருந்தனர்.

அவ்வகையில் ஒரு பாபி குறுங்குழு,பார்ப்பனீய அடிமைத்தனத்தில் ஊறியபடி,தனது சூத்திர ஜாதி ஆணவ உளவியலை வலிமைப்படுத்த சிறுவர் சிறுமியரை வைத்து டிக்டோக் போடும் உரிமைக்காக துடித்துக் கொண்டுள்ளது.

வடிவேலன்(எ)வசுமித்ரா- நிர்மலா கூட்டணியை இங்கு நினைவூட்டிக் கொள்ளவும்.

உலகப் பாட்டாளி வர்க்க விடுதலைக் கருத்தியலாக இயங்கும் மார்க்சியமானது, இந்தியாவுக்குள் வந்ததும் பார்ப்பனீய + ஜாதி ஆண்டை உளவியலால் திரிந்து போகும் ஆபத்தை எதிர்கொண்டபடியே இருப்பதேன் என்கிற கேள்விக்கு, உள்நாட்டு ஃபார்வட் ப்ளாக் என்கிற இடது ஆதரவுக் கட்சியின் சரிவை ஆராய்வது வெளிச்சத்தைத் தரலாம்.

No comments: