Saturday, May 23, 2020

பார்ப்பன காவிகளின் ஆகச் சிறந்த அடிவருடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிக வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஒரு தமிழக அரசு தன் சொந்த மக்கள் மீதே நடத்தும் இரண்டாவது துப்பாக்கிச்சூடு!

இதற்கு முன்பு 1982ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரத்தின்போது பார்ப்பன காவிகளுக்காக அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது எம்.ஜி.ஆர் அரசு.

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் 'விஜயபாரதம்' பத்திரிகையின் 21.10.2016 தேதியிட்ட இதழில், "எம்.ஜி.ஆர் போல ஹிந்துத்வ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே வெளியாகும் அளவுக்கு அ.தி.மு.கவின் பார்ப்பனப் பாசம் ஊரறிந்தது.
(ஆதாரம்: பின்னூட்டத்தில்)

ஆகவே, பார்ப்பனப் பெண்ணான ஜெயலலிதா அ.தி.மு.க தலைவரானதால்தான் அந்தக்கட்சி பார்ப்பன அடிமையானது என்று நாம் கருதினால், அது தவறு. அது ஏற்கனவே பார்ப்பன அடிமையாக இருந்ததால்தான் ஜெயலலிதா எல்லாம் அதன் தலைவராக வரமுடிந்தது.

அதன் நீட்சியாகத்தான் ஜெயலலிதாவால் அண்ணாவின் பெயரில் ஒரு திராவிடக் கட்சிக்கு தலைமைதாங்கிக்கொண்டே பாபர் மசூதியை இடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கரசேவைக்கு ஆட்களை அனுப்பமுடிந்தது.

தற்போது 'பொன்மனச்செம்மல்' எம்.ஜி.ஆர்ஜி, 'இரும்புப் பெண்மணி' ஜெ.ஜெயாலலிதாஜி ஆகிய இருவரையே மிஞ்சும் வகையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமிஜி அவர்கள் பார்ப்பன காவிகளின் ஆகச் சிறந்த அடிவருடியாகத் திகழ்கிறார்.

No comments: