Monday, May 27, 2019

ஹிந்துவம் வளர்ந்தற்க்கு காங்கிரசின் பார்ப்பினிய பானியா கூட்டு தலைமை

ஹிந்தியாவில் ஹிந்துவம் வளர்ந்தற்க்கு காங்கிரசின் பார்ப்பினிய பானியா கூட்டு தலைமை மிக முக்கிய காரணம்.
கடந்த 20 வருடங்களாக தான் பி.ஜெ.பி வட மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் மத்தியில் நடுவன் அரசாகவும் வளர்ந்திருக்கிறது.அதற்கு முன்பு பெரும்பான்மையான மாநிலங்களிலும் மத்தியில் நடுவன் அரசாகவும் இருந்தது காங்கிரஸ் தான்.
இவர்கள் ஆண்ட வட மாநிலங்ககை கல்வி,தொழில்,நகர் மயமாக்களுக்கு எவ்வித முன்னெடுப்பையும் எடுக்காமல் அப்படியே Status Quo தக்க வைத்து ஆட்சியை பிடிப்பது மட்டுமே அவர்களின் குறிகோளாக இருந்திருக்கிறது என்றால் மிகையல்ல.
இந்த விடயத்தில் தமிழ் நாட்டை ஆண்ட திராவிட கட்சிகளை பாரட்ட வேண்டும்.கல்வி,மருத்துவம்,தொழில்,அதன் விளைவாக ஏற்பட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் அறிவு புரட்சி தமிழ் நாட்டை ஹிந்தியாவின் மிக சிறந்த மூன்று மாநிலங்களில் ஒன்றாக நகர்த்திய சாதனையை செய்திருக்கிறது. தமிழ் நாட்டில் நீர் வளமோ இயற்கை வளமோ பெரிதாக இல்லை என்பதை நினைவில் கொள்க.
தமிழ் நாடு, இந்த இடைத்தை அடைந்ததற்க்கு திராவிட இயக்கத்தின் முற்போக்கு பிரச்சாரங்கள் அச்சாணியாக இருந்திருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இன்னொரு முக்கியமான விடயம்,காங்கிரசின் ஓட்டரசியல் மதசார்பின்மை.ஒரு பக்கம் மதசார்பின்மையை ஆதரிக்கிறேன் என்று பேசி ஹிந்துவா இயக்கங்களின் மீது மென் போக்கு கையாண்டது.இன்னொரு பக்கம் மதசார்பின்மை என்று இஸ்லாமியா தாலிபான்களுக்கு ஆதராவக தீயாக வேலைப் பார்த்தது.ஷாபானு வழக்கை நினைவுப் படுத்திக்கொள்ளவும்.
மத அடிப்படைவாதம் என்றால் மத அடிப்படைவாதம் தான்.இதில் ஹிந்து,இஸ்லாம்,கிருத்துவம் என்று ஒன்றை எதிர்த்துவிட்டு,ஒன்றை கண்டும் காணாமல் இருப்பது ஏற்புடையதல்ல.
இதற்கு அன்மை உதாரணம்: சிதராமைய்யா.கர்னாடகாவின் வாக்களர்கள் அவரின் ஆட்சியைப் பற்றி:இதற்கு முன்பு எவரும் செய்யாத பல நல்ல வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள்.ஆனால் எங்களுக்கு அவரின் ஆட்சியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாப்பு இல்லை.
அப்படி அவர்கள் நினைப்பதற்க்கான காரணங்கள்:SDPI இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் மாணவர் அமைப்பான PFI சித்து விளையாட்டுக்கள்.அவற்றில் சில:இஸ்லாமிய மாணவர்கள் நமாஸில் பங்கேற்பதற்க்கு வசதியாக வெள்ளிகிழமை பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுப்பு விட வேண்டும்.
இஸ்லாமியா மாணவ மாணவிகள் குல்லா,தாடி,புர்காவுடன் வகுப்பறையில் அமர அனுமதிக்க வேண்டும்(யுனிஃபாம் வாது மட்டையாவது லாஜிக்)
இதைப்பற்றி Deccan Herald மிக அருமையான கட்டுரை ஒன்று வந்தது.
இறுதியில்,காங்கிரஸ் இப்பொழுது வயதானவர்களின் கட்சி.பல பல கோஷ்டிகளின் கட்சி.அதில் இளம் இரத்தம் புதிய இரத்தம் பாய்ச்ச வேண்டியது காலத்தின் தேவை.
காங்கிரசின் இந்த இரட்டை நிலைப்பாடு ஹிந்த்துவ இயக்கங்களுக்கு தேவையான கருத்தியல் தீனியை வழங்கி அவர்களை ஏகபோகமாக வளர வழி வகை செய்து விட்டது.
இன்னொரு பதிவில்:"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே" எல்லாவற்றிக்கும் அமெரிக்காவை குற்றம் சாட்டும் கம்யுனிஸ்ட்டுகளைப் பற்றி எழுதுவோம்.

No comments: