Wednesday, November 27, 2019

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல்

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல் ஏழைத் தாயின் மகன் எனக் கூறி ஏழைகளை ஒழிப்பவரை ஏன் இந்தியாவின் பெரும்பான்மையினர் கொண்டாடுகின்றனர்...கொண்டாட வைக்கப்படுகின்றனர்?

காரணம் மிக எளிது...

வி.பி.சிங் நடைமுறைப்படுத்திய இரண்டு முன்னெடுப்புகள்:

1. BC/MBC பிரிவினருக்கு கல்வி மற்றும் மத்திய அரசு வேலையில் 27% இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல் படுத்தியது.

2. அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.

இவ்வளவு தான் சார் இந்தியா!

இதை உணர்ந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!!!

அதனால் தான் அந்த மன்னர் குடும்பத்து வாரிசு...அடுத்தப் பிறவி என ஒன்றிருந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தார்.

No comments: