Monday, July 30, 2018

பெரியாரிஸ்டுகளுக்கு இன்று மூன்று விதமான எதிரிகள் இருப்பதாகத் தெரியவருகிறது

பெரியாரிஸ்டுகளுக்கு இன்று மூன்று விதமான எதிரிகள் இருப்பதாகத் தெரியவருகிறது.
1.RSS/இந்து மகா சபை, இந்துமக்கள் கட்சி, VHP போன்ற ஹிந்துத்துவ அமைப்புகள்..இவர்கள் ஈவெரா இந்து விரோதி,பகுத்தறிவுவாதியல்ல..குதர்க்கம் பேசுகிற பெரியாரின் தொண்டர்கள் உங்கள் மனதை புண் படுத்தவே உங்கள் கடவுளை, மதத்தை இழிவாக பேசுகிறார்கள் என்று தூண்டிவிட்டு பெரியாரியத்தை வீழ்த்தி ஹிந்துவாவை அமல்படுத்த துடிக்கும் நேரடி எதிரிகள்..
2. தமிழ்த்தேசியவாதிகள்..இவர்கள் வந்தேறி வடுகர்களால், இதர இனத்(!)தவர்களால் குறிப்பாக தெலுங்கர்கள், கன்னடர்களால் தமிழர்களின் மொழி வீழ்த்தப்பட்டது..வளம் சுரண்டப்பட்டது.கலை ,இலக்கியம் கலாச்சாரம் அழிக்கப்பட்டது,தமிழர்கள் தெலுங்கர்களால் அடிமையாக்கப்பனர் என்றெல்லாம் பேசுகிற மறைமுக இந்துத்துவவாதிகள்..பெரியாரும், கலைஞரும் மட்டுமே கடந்த இரண்டாயிரமாண்டுகளாக நடக்கிற தமிழர்களின் அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்பவர்கள்..
3.தலித்தியம் பேசுகிறவர்கள், முரட்டு அம்பேத்கர் பக்தர்கள் ,தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் ..
இவர்களும் தமிழ்த்தேசியவாதிகளின் வழித்தோன்றல்கள்தான்..
தலித்களின் எதிரி சூத்திர்களும், அவர்களின் தலைவர் பெரியாரும் ,அவரது தொண்டர்களுமே தலித்களின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பவர்கள்..
இவர்களில் கிறிஸ்தவம் தழுவிய தலித்கள் இந்துத்துவ ஆசாமிகளுக்கொப்பானவர்கள்..பெரியார் மீது அவ்வளவு வன்மம் கக்குபவர்கள்..காரணம் அவ்வளவு கிறிஸ்தவ மத போதையில் கட்டுண்டு கிடப்பவர்கள்..பாதிரியாரின் கைப்பாவைகள்..
பெரியாரிஸ்டுகள் கடவுள் ,ஜாதி, மத சடங்கு ,சாஸ்திரங்களில் நம்பிக்கையற்றவர்கள்..ஜாதிமறுப்பு, சமத்துவம் இவற்றுக்காக களப்பணி செய்பவர்கள்..
பதவி, பணம் இவற்றை எதிர்பார்த்து பொதுகாரியங்களில் இறங்குபவர்களல்ல.
சேரிக்குள் வந்து சோறு சாப்பிடுவதெல்லாம் புரட்சியா? சேரி மக்களை ஊருக்குள் கூட்டிப்போய் அமர வைத்து உபசரிப்பதுதானே புரட்சி ?
விமர்சனம் வருகிறது..
கருப்புச்சட்டை பெரியாரிஸ்டுகள் அதை செய்ய தயங்குபவர்களா?
விதவை மணம், சடங்குமறுப்பு, மத மறுப்பு ,கடவுளையே மறுக்கிற பெரியார் தொண்டர்கள் ஜாதியைமட்டும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
இந்த ஜாதிக்காரர் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்பது உங்கள் சனாதனம், ஜாதி கவுவமானால் அதே ஜாதிக்காரர் வீட்டுக்குப்போய் அவர்கள் வீட்டுப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வருவது தான் எங்களுக்கு கவுரவம், சமத்துவம் என்பது எதிர் கொள்கை ,புரட்சி இல்லையா ?
தலித்களுக்குப் பெண் கொடுப்பீர்களா? தலித்களை உங்கள் வீட்டுக்குள் அனுமதிப்பீர்களா ?
ஜாதி பற்றாளர்களுக்கும் பெரியாரிஸ்டுகளுக்கும் வித்தியாசமில்லை என்று நினைக்கிறீர்களா ?
இருவரும் உங்கள் பார்வையில் ஒன்றா ?

No comments: