Saturday, June 22, 2019

காயத்திரி மந்திரம் சொல்லி மூளை வீங்கிய விஞ்ஞானி எஸ்.வீ.சேகர்

காயத்திரி மந்திரம் சொல்லி மூளை வீங்கிய விஞ்ஞானி எஸ்.வீ.சேகர் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஆரியபவன்தான் உள்ளது திராவிடபவன் இல்லை என சமீபத்தில் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகமெங்கும் ஆரியபவன்கள் மட்டுமல்ல முட்டை பப்ஸ் விற்கும் ஐயங்கார் பேக்கரிகளும் உண்டு. ஆனால் இவற்றில் 99% கடைகளை நடத்துவது பார்பனரல்லாதோர்/ஆரியரல்லாதோர். அதாவது, பேருதான் ஆரியபவன். முதலாளி பெரும்பாலும் திராவிடன்தான்.

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. நேற்று ப்ரஸ்டீஜ் "RO water purifier" விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அது வைரஸ், பேக்டீரியாவை கொல்லுவதோடு, இறந்துபோன வைரஸ், பேக்டீரியாவை நீரில் இருந்து அகற்றுமாம். எனவே அது தருவது சுத்தமான வெஜிடேரியன் நீராம்! அதாவது "100% சைவ நீர்" என விளம்பரம் செய்திருந்தார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? '100% சுத்த சைவம்' என போர்டு மாட்டினாலோ, ஆரியம் என பெயர் வைத்தாலோ, ஐயங்கார் என பெயர் வைத்தாலோ பல்லைக் காட்டிக்கொண்டு எஸ்.வீ.சேகரின் கும்பல் வந்து பொருளை வாங்கும் என்றும், தின்றுவிட்டுப் போகும் என்றும் சாதாரண முதலாளிகளில் இருந்து கார்ப்பரேட் கம்பனிகள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் திராவிடத் தமிழர்கள் அப்படி அல்ல. குப்பன், சுப்பன் அசைவ ஓட்டல் நடத்தினாலும் சரி, ஏன் ஐயர்/ஐயங்கார்கள் அசைவ ஓட்டல் நடத்தினாலும் சரி, நன்றாக இருந்தால் போய் சாப்பிடுவார்கள். "100% சுத்தமான அசைவம்" என்கிற பீத்தபெருமைகளோ, திராவிடபவன் என முத்திரை குத்தினால்தான் சாப்பிடுவோம் என்கிற இனவெறியெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. சைவம் சாப்பிட நினைத்தால் ஆரியபவன்களிலும் சாப்பிடுவார்கள்.

சைவம் சாப்பிடுகிறோம் என்கிற பெயரில் முழு கேணையர்களாக இருந்துகொண்டு, ரூபாய் நோட்டுகளில் சிப் வைத்தார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு, திராவிடத்தமிழர்களை கிண்டல் செய்வதற்கெல்லாம் நிஜமாகவே ஒரு முரட்டுத்தனமான முட்டாள்த்தனம் வேண்டும். அது எஸ்.வீ.சேகர் வகையறாக்களிடம் நிறையவே இருக்கிறது.

No comments: