Wednesday, June 19, 2019

ராமநதி அணை கட்டியது கலைஞர் ஆட்சி காலத்தில்

எங்கள் ஊருக்கு அருகில், ராமநதி அணை என்ற ஒன்று உள்ளது. அந்த அணையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் சொன்னார்... காமராஜருக்கு பிறகு யாரும் அணை கட்டவில்லை என்று.
இதில் வேடிக்கை என்னவென்றால், ராமநதி அணை கட்டியது கலைஞர் ஆட்சி காலத்தில்.
அந்த அணையில் குளித்துக் கொண்டிருக்கும், 99 சதவீத ஆட்களிடம் அது கலைஞர் ஆட்சியில் கட்டியது என்றால், நம்ப மாட்டார்கள். கழுத்தைப் பிடித்து கல்வெட்டு முன் இழுத்துச்சென்று அதில் எழுதியிருப்பதை வாசிக்க சொன்னால் கூட நம்பமாட்டார்கள்.
சிலருக்கு பால் ஒவ்வாமை இருப்பது போல, நீதிக்கட்சி, பெரியார், கலைஞர் ஒவ்வாமை இருக்கிறது.
பால் ஒவ்வாமை "lactose intolerance" இருப்பது பாலின் குற்றமல்ல.

No comments: