Thursday, June 20, 2019

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?

சமீபத்தில் புதிதாக நான் சேர்த்துள்ள நிறுவனத்தில், உடன் வேலை செய்யும் ஐயர் நண்பருடன் மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில்,
"பாகற்காய் சாப்பிடுங்க. முடிஞ்சா vegetarian ஆ மாறிடுங்க. நீங்க சாப்பிடற எல்லா விஷயத்தில இருக்க சத்தும் இங்கேயும் இருக்கு. நாமளும் ஒரு உயிர் தானே? எப்படி இன்னொரு உயிரை சாப்பிடுற காரியத்த பண்றமோ" ன்னு சலிப்போட சொன்னார்.
பதிலுக்கு நானும், "லோகத்துல இப்போ மரம் செடி தான் கம்மியா இருக்காம். ஏன் நீங்க அதை இன்னும் இன்னும் அழிச்சுண்டு இருக்கேள்? நாம எல்லாரும் காட்டுவாசியா இருந்தவங்க தானே? நீங்க ஏன் கொஞ்ச காலத்துக்கு நம்ம பக்கம் வரப் படாது?"ன்னு கேட்டேன்.
அதோட அமைதியா சாப்பிட்டு எழுந்து போன அவர், இப்போ வரை என் பக்கமே திரும்பல.
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?

No comments: