Sunday, June 16, 2019

ராஜராஜ சோழன் நிலத்தை புடுங்கினார் என்று சொன்னதை விட...

ராஜராஜ சோழன் நிலத்தை புடுங்கினார் என்று சொன்னதை விட... பஞ்சமி நிலம் என்று 1892/93ல்  ஆங்கிலேயர்கள் கொடுத்த இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை புடுங்கிவிட்டார்கள் என சொன்னால் கூட பொருத்தமாக ஆதரபப்பூர்வமாக இருக்கும்..

1891ல் செங்கல்பட்டு ஆட்சியர் தாழ்த்தபட்டோர் எதிர்காலத்தூக்காக பொருளாதார வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை அவர்களுக்கு தானமாக வழங்கலாம் சொன்ன அறிக்கையை அடுத்த இரண்டாண்டில் பிரிட்டீஷ் பார்லிமென்ட் அனுமதி அளித்து பஞ்சமி நிலம் என தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது..

 நபஞ்சமி நிலத்தை அடமானமாகவே விற்கவோ  தலித் அல்லாதவர்களுக்கு விற்கமுடியாது என்ற சட்டமும் பிரிட்டீஸ் அரசு இயற்றியது அப்படிபட்ட பஞ்சமிலம் இன்று 100%தலித்களிடமிருந்து பறிக்கபட்டுள்ளது..

ராஜராஜன் புடுங்கியதை விட ஆங்கிலேயர் காலத்தில் நில அளவீடு செய்யபட்டு கொடுத்த பஞ்சமி நிலத்தை பறிக்கபட்டதை பற்றி ரஞ்சித் பேசினாலும் அது ஆதரப்பூர்வமாககவும் பரவலான விதாததத்திற்கு வரும்..

பஞ்சமி நிலம் பற்றி 100% தெரிந்த ஆதவன் தீட்சன்யா ரஞ்சித்தின் வசனகர்த்தாக இருப்பவர் கட்டயமாக பஞ்சமி நிலம் பற்றி ரஞ்சித்திடம் பேசியிருப்பார்..

அப்படி இருக்கையில் ராஜராஜன் பற்றிய ட்வீட்லாம் வெறும் ஏட்டுசுரைக்காயாக எதற்கும் உதவாத வெத்து விவாதத்த்தை மட்டுமே வளர்த்துவிடும்..

No comments: