Sunday, June 16, 2019

தமிழ் நாட்டு முட்டாள் மனங்களின் மீது இடி ஒன்றை இறக்கி விட்டு சென்றவர் யாரென்றால்

பெரியார் ★

தமிழ் நாட்டு முட்டாள் மனங்களின் மீது இடி ஒன்றை இறக்கி விட்டு   சென்றவர் யாரென்றால் அது பெரியார் தான்

தமிழ் நாட்டு மக்கள் ஒரு பக்கம் பெரியாரை பாராட்டி கொண்டு இருக்கிறார்கள்
இன்னொரு பக்கம் மோசமாக கெட்ட வாரத்தையில் வசை பாடி கொண்டு இருக்கிறார்கள்

இரண்டுக்கும் உரிய மனிதராக அறியப்படுகிறார் பெரியார்

ஆழ்ந்து கற்று கொண்டதால் வந்ததில்லை
பெரியாரின் பகுத்தறிவு

அது இயல்பாகவே அவருக்குள் ஊற்றெடுத்தது

பெரியார் என்றால் சுயமரியாதை

அத்தனை   அழகான வார்த்தை அது

ஆனால் ஓஷோ கூட சில இடங்களில் சுயமரியாதை என்னும் வார்த்தையை நேரடையாக பயன்படுத்துகிறார்

அப்படியே பகுத்தறிவு என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்

அப்போதெல்லாம் நான் பெரியாரை
ஆழமாக விரும்ப தொடங்கினேன்

ஓஷோவும் எனக்கு சுயமரியாதை மிக முக்கியமானது என்கிறார்

அதை ஒரு இயக்கமாக சமூக தளத்தில் மக்களிடம்  கொண்டு சென்று
தன்னுணர்ச்சியை ஊட்டி  சென்றவர் யாரென்றால்  பெரியார் தான்

பெரியார் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு
அந்த இடத்தை காலியாக விட்டு வைத்தார்

அந்த இடத்தை முழுமையாக நாத்திகம் நிரப்பி கொண்டது

நாத்திகம் என்றாலே வறட்சியானது யென்று சிலருடைய எண்ணம்

என்னை பொறுத்தவரை மோசமான ஆன்மிகத்தை விட
நாத்திகமே மேலானது

உண்மையில் நல்ல ஆன்மிகம் என்பது
ஒரு விதத்தில் நாத்திகமே

இந்த இந்து மதம் பெரியாரின் கண்களை மிகவும் உறுத்தி கொண்டே இருந்தது

பெரியார் சமரசமின்றி அவற்றை வெட்டி வீழ்த்தினார்

உலகிலேயே முட்டாளின் மதமென்றால் அது இந்து மதம் தான்

மனிதர்களை மதத்தின் பெயரில் எத்தனை அசிங்க படுத்த முடியுமோ.?
அத்தனை வேலைகளையும் இந்து மதம் செய்தது

இந்தியா பின் தங்கி இருப்பதற்கு இந்து மதமே காரணம் எனலாம்

மக்கள் முட்டாள் தனத்தை நம்புகிறார்கள்
அதை விரும்புகிறார்கள்

அதை கொண்டாடி கொள்கிறார்கள்

அவர்கள் விருப்பத்தில் நீங்கள் குறுக்கிடும் போது அதை அவர்கள் ஏற்று கொள்வதில்லை

அது அவர்களை குறுக செய்கிறது

பெரியார் அந்த குறுகிய தனத்தை உடைத்தெரி ந்தார்

மக்களை அடிமைத்தனம்  உறைந்த போக செய்துள்ளது

அந்த உறைநிலையை பெரியார் உடைத்தெறிந்தார்

மக்கள் அதில் பாதுகாப்பை உணர்ந்தார்கள்

அது சுத்தமாக பெரியாருக்கு பிடிக்கவில்லை

அடித்து நொறுக்கினர்

பெரியார் என்றாலே அதிரடி தான்

உண்மையில் தமிழர்கள் மிகவும் பழமையானவர்கள்

அவர்கள் அவர்களுடைய பழமையை நினைத்து கொண்டு பெருமை பட்டு கொள்வார்கள்

மிக நீண்ட தொன்மையான பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள்

அதை நீங்கள்  கொச்சைப்படுத்தினால்

அதை அவர்கள் ஏற்று கொள்வதில்லை

தமிழ் வாழ்வியலுக்கு முற்றிலும் எதிரானவர் பெரியார்

வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பிலே வாழ்ந்து  கழித்தவர் பெரியார்

அதுதான் அவருக்கு பெரிய பலமே

எதிர்ப்பு தான் அவருக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்ந்தது

எதிர்ப்பை போலவே ஆதரவும் அவருக்கு கூடியது

உண்மையில் தமிழர்களின் வரலாறு என்பதே
பெரியார் தான்

பெரியாரின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு

அதை அத்தனை எளிதில் யாரும் துடைத்தெறிந்து விட முடியாது

பெரியாரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது

மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று பெரியார் பேசி கொண்டு இருக்கவில்லை

நல்ல பெயர் வாங்க என்ன என்ன ஒரு மனிதன் செய்ய  வேண்டுமோ?
அதையெல்லாம் பெரியார் வெறுத்து தள்ளினார்

உண்மையாக இருப்பதின் ஆபத்து மிக பெரிது

பெரியார் ஆபத்தை விரும்பினார்

உண்மையை யார்தான் விரும்புகிறார்கள்

பெரியாரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது  ஏனென்றால்

அனைத்து வகை மனிதர்களின் கர்வத்தை பெரியார்

உடைத்தெறிந்து விட்டார்

இந்திய நில பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளாக
அடிமைப்பட்டு கிடந்த மக்களின் உரிமையை பேசியவர் பெரியார் மட்டும் தான்

இப்போதும் பாருங்கள் முட்டாள் மக்கள்

மன்னரின் ஆட்சி பொற்காலம்  என்றெல்லாம்

பிதற்றி கொள்வார்கள்

உண்மையில் மக்கள் மக்களாட்சிக்கு எதிராணவர்களே

அதனால் தான் சில நாடுகளில் புரட்சி தோன்றுவதே இல்லை

மக்கள் விழித்தெழுவதே இல்லை

மக்கள் உற்சாகம் கொள்வதில்லை

பெரியார் போன்ற ஒருவர் வரும் போது
எல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகிறது

அப்போது வரலாறு புதிய மாற்றத்தை உள் வாங்கி கொள்கிறது

No comments: